முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படும்: மீனாட்சி அம்மன் கோவில் தீ விபத்து குறித்து அமைச்சர்!
மீனாட்சியம்மன் கோவில் தீ விபத்து போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
Recommended Video

மதுரை: மீனாட்சியம்மன் கோவில் தீ விபத்து போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கிழக்கு கோபுர வாசல் அருகே ஆயிரங்கால் மண்டபம் அமைந்த பகுதியில் வளையல் கடை, விளையாட்டுப் பொருட்கள் கடை என பல்வேறு கடைகள் உள்ளன.

இந்நிலையில் இங்கு நேற்றிரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வாகனங்கள் 4 மணி நேரத்துக்கும் மேலாக போராடி தீயை கட்டுப்படுத்தினர்.
இருப்பினும் இந்த விபத்தில் 50க்கும் மேற்பட்ட கடைகள் எரிந்து நாசமாயின. மேலும் ஏரளாமான புறாக்கள் தீயில் கருகின.
இந்நிலையில் தீ விபத்து குறித்து பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் இனி இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications