புழல் சிறையில் 3வது முறை தற்கொலைக்கு முயன்ற கைதி.. ராம்குமார் சம்பவத்திற்கு பிறகும் மாறாத சிறைத்துறை
சென்னை புழல் சிறையில் கைதி ஒருவர் பிளேடை விழுங்கி தற்கொலைக்கு முயன்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த கைதி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: புழல் சிறையில் விமல் என்ற கைதி அடைக்கப்பட்டுள்ளார். அவர் இன்று பிளேடை விழுங்கி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
கொலை முயற்சி வழக்கில் விமல் என்ற கைதி சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் இன்று திடீரென மறைத்து வைத்திருந்த பிளேடை விழுங்கி தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து உயிருக்கு ஆபத்தான நிலையில் கைதி விமலை மீட்ட சிறைக் காவலர்கள் அவரை சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவ மனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கொலை முயற்சி வழக்கில் சிறைத் தண்டனை பெற்றுள்ள கைதி விமல் தற்கொலைக்கு முயல்வது இது முதல் முறையல்ல. ஏற்கனவே இதுபோல் 2 முறை அவர் தற்கொலைக்கு முயன்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications