இளைஞரை பீர் பாட்டிலால் தாக்கிய தனியார் டிவி டான்ஸ் மாஸ்டர் கைது
ராயபுரம்: சென்னை பாரிமுனையில் வாலிபர் தலையில் பீர் பாட்டிலால் தாக்கிய நடன இயக்குனர் ஒருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மண்ணடி லிங்கி செட்டி தெருவை சேர்ந்தவர் அசன். இவரது தம்பி இப்ராகிம். இவர்கள் 2 பேரும் பாரிமுனையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரே ஒரு கார் வந்து நின்றது. எனவே காரில் இருந்தவர்களுக்கும், அசன் சகோதரர்களுக்கும் இடையே வாக்குவாதமும், அதை தொடர்ந்து தகராறும் ஏற்பட்டது.
அப்போது காரில் வந்த முகமது ரியாஸ், ராஜ்குமார் ஆகியோர் இப்ராகிம் தலையில் பீர் பாட்டிலால் தாக்கினர். அதில் அவரது மண்டை உடைந்தது. அசனுக்கும் சரமாரியாக அடி உதை விழுந்தது.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டதை அடுத்து ராஜ்குமார், முகமது ரியாஸ் ஆகிய 2 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்களில் ராஜ்குமார் ஒரு தனியார் டி.வி. நிகழ்ச்சியில் நடன இயக்குனராக பணி புரிகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.