ஈரோட்டில் 11-ம் வகுப்பு மாணவி தற்கொலை.. பள்ளி விடுதி அறையில் தூக்கில் தொங்கினார்
தனியார் பள்ளி விடுதியில் 11-ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
Recommended Video

ஈரோடு: ஈரோட்டில் தனியார் பள்ளி விடுதியில் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு புதுக்காலனியை சேர்ந்தவர் பழனிச்சாமி. சுமைதூக்கும் தொழிலாளியான இவரது மகள் ஜெயபிருந்தா. ஈரோடு அருகேயுள்ள கொங்கம்பாளையத்தில் செயல்படும் தனியார் பள்ளியான எஸ்.எஸ்.வி.என்னில் 11 ம் வகுப்பு விடுதியில் தங்கி படித்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று வகுப்பிற்கு சென்று விட்டு வந்த அவர் விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக விடுதி காப்பாளர் கொடுத்த புகாரின் அடிப்படையில் சம்பவ பகுதிக்கு வந்த சித்தோடு போலீசார் மாணவியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
மேலும் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் மாணவி தற்கொலை செய்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி விடுதி அறையில் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஈரோட்டில் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications