அரசு பள்ளிகளுக்கு பாடப்புத்தகங்கள் முழுமையாக வழங்கப்பட்டுள்ளன: அமைச்சர் செங்கோட்டையன்

பள்ளிகளுக்கு பாடப்புத்தகங்கள் முழுமையாக வழங்கப்பட்டுள்ளன: அமைச்சர் செங்கோட்டையன்

Subscribe to Oneindia Tamil

ஈரோடு: அரசு பள்ளிகளுக்கு பாடப்புத்தகங்கள் முழுமையாக வழங்கப்பட்டுள்ளன என்று பள்ளிக்கல்விதுறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். மேலும் தனியார் பள்ளிகளுக்கு கடந்த வெள்ளிகிழமை முதல் பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஈரோடு ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 41.6 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடம் கட்டுவதற்கான பூமிபூஜை நடைபெற்றது. இதல் தமிழக பள்ளிகல்விதுறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

private schools have been offered textbooks since last friday minister sengottaiyan

இதனையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் செங்கோட்டையன், தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு பாடபுத்தகங்கள் முழுமையாக வழங்கப்பட்டுள்ளதாகவும் தனியார் பள்ளிகளுக்கு கடந்த வெள்ளிகிழமை முதல் வழங்கப்பட்டு வருகிறது என்றும் கூறினார்.

மேலும் நீட் தேர்வில் அரசு பள்ளிகளில் படித்த 1412 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளதாகவும் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் பயிற்சி மையங்கள் தொடங்கப்பட்ட நிலையில் நடப்பு ஆண்டு நீட் தேர்வுக்கான பயிற்சி ஜூலை முதல் வாரத்தில் தொடங்கப்படும் எனவும் கூறினார்

இதேபோல் மருத்து படிப்பிற்கான கட்ஆப் மதிப்பெண் நாளை தெரியவரும் எனவும் அதன்பின்னர் நீட் தேர்வில் வெற்றி பெற்ற அரசு பள்ளி மாணவர் எண்ணிக்கை வெளியிடப்படும் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+