மத்திய அமைச்சர்களை தமிழகத்துக்குள் வர விடாமல் தடுப்போம்- 12 தமிழ் அமைப்புகள் அறிவிப்பு
கோவை: காமன்வெல்த் மாநாட்டில் மத்திய அரசைக் கலந்து கொள்ள விடாமல் தடுக்கத் தவறிய தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள், தமிழகத்துக்குள் வர விடாமல் தடுத்துப் போராட்டம் நடத்தப்படும் என்று 12 தமிழ் அமைப்புகள் ஒன்று கூடி தீர்மானம் கொண்டு வந்துள்ளன.
நவம்பர் 12ம் தேதி நடைபெறவுள்ள மாநிலம் தழுவிய கடையடைப்புப் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் பெரியார் திராவிடர் கழகத்தின் தலைவர் கு.ராமகிருஷ்ணன் தலைமையில் நடந்தது.
இதில் 12 தமிழ்அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். கூட்டத்திற்குப் பின்னர் கு.ராமகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் இதைத் தெரிவித்தார்.
இக்கூட்டம் மதிமுக மாவட்டச் செயலாளர் மோகன் குமார் தலைமையில் நடந்தது. அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், நவம்பர் 12ம் தேதியன்று கடையடைப்புப் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்த வர்த்தர்களிடன் ஆதரவைக் கோருவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 12ம் தேதி அனைத்து முக்கிய ரயில் நிலையங்களிலும் ரயில் மறியல் போராட்டமும் நடத்தப்படும். இதில் 5000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பார்கள்.
மேலும் தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் யாரையும் நுழைய விடாமல் தடுத்துப் போராட்டமும் நடத்தப்படும் என்றார்.
இக்கூட்டத்தில் மனித நேய மக்கள் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, நாம் தமிழர் கட்சி உள்ளிட்டவற்றின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications