For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சொத்துக்குவிப்பு வழக்கில் ஒரு வாரத்தில் தீர்ப்பு... சசிகலா பதவியேற்பு தேதி தள்ளி வைக்கப்படுமா?

சொத்துக்குவிப்பு வழக்கில் இன்னும் ஒரு வாரத்தில் தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் முதல்வராக சசிகலா பதவியேற்பது தள்ளி வைக்கப்படுமா என கேள்வி எழுந்துள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் இன்னும் ஒரு வாரத்தில் தீர்ப்பு வழங்கப்படும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. இதனால் சசிகலா முதல்வராக பதவியேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் 2015ஆம் ஆண்டு நீதிபதி மைக்கேல் டி குன்ஹா 4 பேருக்கும் 4 ஆண்டு சிறை தண்டனையும் 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

இதனை எதிர்த்து ஜெயலலிதா தரப்பு கெர்நாடக உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இதில் 4 பேருக்கும் விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்து கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி குமாராசாமி ரத்து செய்து தீர்ப்பளித்தார்.

கடந்த மாதமே எதிர்ப்பார்க்கப்பட்டது

கடந்த மாதமே எதிர்ப்பார்க்கப்பட்டது

இதனை எதிர்த்து கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.இந்த வழக்கில் இரு தரப்பு வாதங்கள் முடிந்துள்ள நிலையில் கடந்த மாதமே தீர்ப்பு வெளியாகும் என எதிர்ப்பார்க்க்பபட்டது.

ஒரு வாரத்தில் தீர்ப்பு

ஒரு வாரத்தில் தீர்ப்பு

இந்நிலையில் சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் இன்னும் ஒரு வாரத்தில் தீர்ப்பு வழங்கப்படும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. ஆளும் அதிமுக சட்டசபைக்குழு தலைவராக நேற்று தேர்வு செய்யப்பட்ட சசிகலா 9ஆம் தேதிக்குள் தமிழக முதல்வராக பதவியேற்பார் என தகவல் வெளியானது.

பதவியேற்பதில் சிக்கல்

பதவியேற்பதில் சிக்கல்

இதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் உச்சநீதிமன்றத்தின் இந்த அறிவிப்பு காரணமாக சசிகலா பதவியேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

பீதியில் மன்னார்குடி கும்பல்

பீதியில் மன்னார்குடி கும்பல்

சசிகலா பதவியேற்பு தேதி தள்ளி வைக்கப்படுமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. உச்சநீதிமன்றத்தின் இந்த திடீர் அறிவிப்பு முதல்வராகும் எண்ணத்தில் இருந்த சசிகலா தரப்பை பீதியடையச் செய்துள்ளது.

English summary
Supreme Court will be giving judgment in Jayalalitha's assets case within a week. This causes problem to sasikala to swearing as Chief minister of Tamilnad.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X