பேரறிவாளன் விடுதலைக்கான வாகனப் பேரணி... தயாரிப்பாளர் சங்கம் ஆதரவு
Subscribe to Oneindia Tamil
சென்னை: ராஜீவ் கொலை வழக்கில் கைதாகி 25 ஆண்டு காலம் சிறையிலிருக்கும் பேரறிவாளனை விடுதலை செய்யக் கோரி நடக்கும் மோட்டார் வாகனப் பேரணிக்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் முழு ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ளது.

இதுகுறித்து இன்று தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுவிக்கக் கோரி தாயுள்ளத்தோடு முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றினார்.
இந்த வழக்கில் 25 ஆண்டுகள் சிறையிலேயே தனது இளமையைக் கழித்துவிட்ட பேரறிவாளனை விடுவிக்கக் கோரி அவரது தாயார் அற்புதம் அம்மாள் நாளை 11.06.2016 அன்று வேலூரிலிருந்து கோட்டை நோக்கி வாகனப் பேரணி நடத்தி, முடிவில் முதல்வர் ஜெயலலிதாவிடம் மனு கொடுக்கப் போகிறார்.












Click it and Unblock the Notifications