மாணவிகளை சுற்றுலா என்ற பெயரில் செக்ஸ் படத்துக்கு அழைத்து சென்ற பேராசிரியர் கைது
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பல்கலைக்கழக பேராசிரியரை போலீசார் கைது செய்தனர்.
காரைக்குடி: சுற்றுலா என்ற பெயரில் மாணவிகளை செக்ஸ் படத்துக்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக அழகப்பா பல்கலைக்கழக பேராசிரியரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் வாழ்நாள் கல்வியியல் துறையில் இதழியல் மற்றும் மக்கள் தொடர்பு துறை தலைவராக பணிபுரிந்து வருபவர் அருணாசலம் (47).

இவர், மாணவிகளை கோவா, மற்றும் கன்னியாகுமரிக்கு சுற்றுலா அழைத்துச் சென்றுள்ளார். அங்கு மாணவிகளை செக்ஸ் படத்துக்கு அழைத்து சென்றதாக கூறப்படுகிறது.
மேலும் மாணவிகளிடம் ஆபாச படங்களை காண்பித்தும், செல்போனில் ஆபாச படங்களை அனுப்பியும் பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. இதையடுத்து இதழியல் துறை மாணவ, மாணவிகள் காரைக்குடி டி.எஸ்.பி. கார்த்திகேயனிடம் புகார் செய்தனர்.
அதன் பேரில் பேராசிரியர் அருணாசலம் மீது பெண் வன்கொடுமை, பாலியல் தொல்லை உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications