எச்சூஸ்மி மேடம்ஸ் உங்களுக்கு இதுதான் வேலையா?
மாணவிகளை பேராசிரியைகள் தவறான பாதைக்கு அழைப்பது தொடர்கதையாகியுள்ளது.
Recommended Video

திருவண்ணாமலை: மாணவிகளை பேராசிரியைகள் தவறான பாதைக்கு அழைப்பது அதிகரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை அரசு வேளாண் கல்லூரி மாணவிக்கு உதவி பேராசிரியர் பாலியல் தொல்லை கொடுத்ததும் அதற்கு விடுதி வார்டன்கள் உதவியாக இருந்ததும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பான ஆடியோக்கள் வெளியாகி பிபியை எகிற வைத்துள்ளது. உதவி பேராசிரியருக்கு உதவுவதற்காக மாணவியை பேராசிரியைகள் மிரட்டுவதும் பெற்றோர் இடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

இருவரும் முனைவர் பட்டம்
மாணவியை மிரட்டிய விடுதி வார்டன்கள் மைதிலி, புனிதா ஆகிய இருவரும் பேராசிரியைகளாக உள்ளனர். இருவரும் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர்.

கோவை புனிதா
அண்மையில் இதே புகாரில் தான் அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலா தேவி தற்போது கம்பி எண்ணிக்கொண்டிக்கிறார். இதேபோல் கோவை மகளிர் தனியார் விடுதி வார்டன் புனிதாவும் தனது முதலாளிக்கு விசுவாஸமாக இருக்க விடுதியில் தங்கியிருந்த பெண்களை அவர் விருந்தாக்க முயன்றார்.

தாயாக இருக்க வேண்டியவர்கள்
தாயாக இருந்து மாணவிகளை நல்வழிப்படுத்த வேண்டிய பேராசிரியைகள் தங்களின் சுயநலனுக்காக வேண்டி மாணவிகளை ஆண்களுக்கு விருந்தாக்க துணிவது ஏற்றுக்கொள்ள முடியாதது.

துணை போகலாமா?
தன்னிடம் படிக்க வரும் மாணவியை படுக்கைக்கு அழைக்கும் ஒரு ஆசிரியரின் அராஜகத்திற்கு, இந்த பேராசிரியைகள் துணை போகலாமா? அதற்காக மாணவியை கீழ்த்தரமாக பேசுவதும் திட்டுவதும் எந்த விதத்தில் நியாயம்?

இதுதான் இவர்களது வேலையா?
இதுதான் இவர்களது வேலையா? இதற்குதான் அரசு இவர்களுக்கு அரசு சம்பளம் கொடுக்கிறதா? மாணவிகளின் எதிர்காலத்தையும் பெண் கல்வியையும் கேள்வி குறியாக்கும் இதுபோன்ற பிரச்சனைகளுக்கு அரசு என்ன பதில் சொல்லப்போகிறது?












Click it and Unblock the Notifications