தஞ்சாவூரில் மீண்டும் களமிறங்கிய ரெங்கசாமி.... அதிருப்திகளை மீறி கரைசேருவாரா?
சென்னை: தஞ்சாவூர் சட்டசபை தொகுதியில் அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சிட்டிங் எம்.எல்.ஏ. கடந்த 5 ஆண்டுகாலம் தாம் கொண்டு வந்த நலத்திட்டங்கள் கை கொடுக்கும் என நம்பிக்கையோடு களத்தில் நிற்கிறார்.
தஞ்சாவூர் தொகுதி அதிமுக வேட்பாளராக சிட்டிங் எம்.எல்.ஏ. ரெங்கசாமி (வயது 60) நிறுத்தப்பட்டுள்ளார். இவர் கள்ளர் சமூகத்தைச் சேர்ந்தவர்.
தஞ்சாவூர் மாநகராட்சியின் 52 வார்டுகள், வல்லம் பேரூராட்சி, தஞ்சாவூர் ஒன்றியத்தின் ஒரு பகுதியான புதுப்பட்டினம், ராவுசாகிப்தோட்டம், கடகடப்பை, மேலசித்தர்காடு, புன்னைநல்லூர், புளியந்தோப்பு, பிள்ளையார்பட்டி, நீலகிரி, நாஞ்சிக்கோட்டை ஆகிய 9 ஊராட்சிகள் இத்தொகுதியில் உள்ளன. இத்தொகுதியில் கள்ளர், இஸ்லாமியர், கிறிஸ்தவர், நாயக்கர், மராத்தியர், சௌராஸ்டிரா, யாதவர், பிராமணர், நாடார், வெள்ளாளர், அகமுடையார், தலித் சமூகத்தினர் பரவலாக உள்ளனர்.

பாலங்கள்
தஞ்சாவூர் தொகுதியில் கடந்த 5 ஆண்டுகளாக ரூ. 1,880 கோடி மதிப்பில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இதுதவிர, மேலும் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக,பெரியகோயில் அருகே கல்லணைக் கால்வாயில் பாலம், சீனிவாசபுரம், மேல அலங்கம், கொடிமரத்து மூலை, தெற்கு அலங்கம் உள்பட 11 இடங்களில் புதிய பாலங்கள் அமைக்கப்படுகின்றன.
வாக்காளர்களுக்கு பணம்
சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் போது தஞ்சாவூருக்கு ஒதுக்கப்பட்ட நலத் திட்டங்களை முன்வைத்து பிரசாரம் செய்தார் ரெங்கசாமி. ஆனால் கொடுத்த வாக்குறுதிகள் எதனையுமே நிறைவேற்ற காரணத்தால் பொதுமக்கள் கடும் அதிருப்தியில் இருந்தனர்; இதைசரிகட்டவே பணத்தை வாரி இறைத்தார் எனவும் கூறப்படுகிறது.
நிறைவேறாத கோரிக்கைகள்
பொதுமக்களிடத்தில் மட்டுமல்ல அதிமுக தொண்டர்களும் ரெங்கசாமி மீது கடும் அதிருப்தியில் இருக்கிறார்களாம்.. தஞ்சாவூர் - சென்னை இடையே முன்பு ஓடி, பின்னர் நிறுத்தப்பட்ட ரயில்களை மீண்டும் இயக்க வேண்டும். தஞ்சை - திருச்சி இரண்டாவது ரயில் பாதை பணியை விரைந்து முடிக்க வேண்டும்.
போக்குவரத்து நெரிசல்
ரயில்வே கீழ் பாலத்தில் தண்ணீர் தேங்காமல் இருக்க மாற்று வழி காண வேண்டும். வெளிநாட்டு, உள்நாட்டு சுற்றுலா பயணிகள் அதிகம் வரும் பெரிய கோயில் பகுதியில் போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வுகாண வேண்டும். அடிக்கடி தீப்பற்றி எரியும் ஜெபமாலைபுரத்தில் உள்ள மாநகராட்சி திறந்தவெளி குப்பைக் கிடங்கை இடம் மாற்ற வேண்டும். மேரீஸ் கார்னர் உள்ளிட்ட நகரின் முக்கிய இடங்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண வேண்டும் போன்ற முக்கிய கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் உள்ளன என்கின்றனர் தஞ்சை வாக்காளர்கள்.
கட்சியிலும் பொதுமக்களிடத்திலும் இருக்கும் இத்தனை அதிருப்திகளையும் தாண்டி ரெங்கசாமி கரைசேருவாரா?
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications