சென்னை ஐடி நிறுவனங்கள் முன் காரில் விபச்சாரம்: டிவி சீரியல் நடிகை உள்பட 3 பேர் கைது
சென்னை: சென்னையில் கம்ப்யூட்டர் நிறுவனங்கள் முன்பு சொகுசு கார்களில் அழகிகளை வைத்து விபச்சாரம் செய்து வந்த துணை நடிகை உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னையில் உள்ள கம்ப்யூட்டர் நிறுவனங்களுக்கு முன்பு சொகுசு கார்களை நிறுத்தி அதில் விபச்சாரம் நடக்கிறது என்று போலீசாருக்கு புகார்கள் வந்தன. இந்த புகார் குறித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு கமிஷனர் ஜார்ஜ் உத்தரவிட்டார். இதையடுத்து தனிப்படை அமைக்கப்பட்டு அவர்கள் சென்னை ஓ.எம்.ஆர்., எம்.சி.ஆர். சாலைகளில் இருக்கும் கம்ப்யூட்டர் நிறுவனங்கள் முன்பு காண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது கார்களை நிறுத்தி அழகிகளை வைத்து விபச்சாரம் நடத்திய ஷீலா(30), கோபி(30), கார்த்திக் ஆகிய 3 தரகர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் ஷீலா சினிமா படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார். தற்போது தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார்.
அவர்களால் விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட 7 பெண்கள் மீட்கப்பட்டனர். மேலும் அந்த 3 பேரிடமும் இருந்து 3 சொகுசு கார்கள் மீட்கப்பட்டுள்ளன.