For Quick Alerts
For Daily Alerts
Just In
நபிகள் நாயகத்தை அவதூறாக பேசிய எச்.ராஜாவை கைது செய்ய கோரி வேலூரில் இஸ்லாமிய பெண்கள் போராட்டம்!
பாஜக தேசிய செயலாளர் எச் ராஜாவை கைது செய்யக்கோரி வேலூரில் இஸ்லாமிய பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வேலூர்: பாஜக தேசிய செயலாளர் எச் ராஜாவை கைது செய்யக்கோரி வேலூரில் இஸ்லாமிய பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பாஜக தேசிய செயலாளரான எச் ராஜா அவ்வப்போது சர்ச்சைக் கருத்துக்களை கூறி வருகிறார். அவருக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் எச் ராஜா நபிகள் நாயகத்தை அவதூறாக பேசியதாக புகார் எழுந்துள்ளது. எச் ராஜாவைக் கண்டித்து
வேலூரில் இஸ்லாமிய பெண்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
எச். ராஜாவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஆண்டாள் குறித்து வைரமுத்து கூறிய கருத்துக்கு ஸ்ரீவில்லிப்புத்தூரில் நேரில் மன்னிப்பு கேட்க வேண்டும் என எச் ராஜா வலியுறுத்தி வந்தார். இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்த நிலையில் எச் ராஜா மேலும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
Comments
English summary
Protest against H Raja in Vellore. H Raja criticized Nabigal Nayagam it seems. Muslim womans protest in Vellore against H Raja.
Story first published: Thursday, January 18, 2018, 18:47 [IST]