ஸ்டெர்லைட்டுக்கு எதிராக 47ஆவது நாளாக தொடரும் போராட்டம்! நிரந்தரமாக மூடும் வரை ஓயாது.. மக்கள் ஆவேசம்!
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கிராம மக்களின் போராட்டம் 47 வது நாளாக நீடிக்கிறது.
Recommended Video

தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கிராம மக்களின் போராட்டம் 47 வது நாளாக நீடிக்கிறது.
தூத்துக்குடியில் செயல்பட்டு தாமிர உருக்காலையான ஸ்டெர்லைட்டில் இருந்து வெளியாகும் நச்சுப்புகையால் அப்பகுதி குழந்தைகள் மற்றும் மக்கள் சுவாசக்கோளாறு, ரத்தசோகை போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் குடிநீரும் முற்றிலும் மாசடைந்துள்ளதால் மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். மக்களின் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் இந்த ஆலையை மூடவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துவருகின்றனர்.
இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இதனை கண்டித்து குமரெட்டியாபுரம் கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கிராம மக்களின் போராட்டத்துக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பராமரிப்பு பணிக்காக ஸ்டெர்லைட் ஆலை 15 நாட்கள் மூடப்பட்டுள்ள போதும், 47வது நாளாக குமரெட்டியாபுரம் கிராம மக்கள் தங்களின் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.
ஆலையை நிரந்தரமாக மூடும் வரை போராட்டம் தொடரும் என்றும் கிராம மக்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications