ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 48வது நாளாக போராட்டம்.. மூடாவிட்டால் முற்றுகை.. கிராம மக்கள் வார்னிங்
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் இன்று 48வது நாளாக நீடிக்கிறது.
Recommended Video
தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் இன்று 48வது நாளாக நீடிக்கிறது.
தூத்துக்குடியில் இயங்கி வரும் தாமிர உருக்கு ஆலையான ஸ்டெர்லைட் ஆலையால் அப்பகுதியில் குடிநீர் பாதிக்கப்பட்டுள்ளதோடு ஏராளமான நோய்களும் உருவாவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை விரிவாக்கம் செய்ய அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனை எதிர்த்து குமரெட்டியாபுரம் கிராம மக்கள் இன்று 48வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் அங்கேயே சமைத்து சாப்பிடுவதோடு வீடுகளுக்கு செல்லாமல் அங்கேயே உறங்கி வருகின்றனர். இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடாவிட்டால் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என கிராம மக்கள் எச்சரித்துள்ளனர்.
இதனிடையே நேற்று முன்தினம் முதல் பராமரிப்பு பணிக்காக ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.