வாக்குறுதியை மீறி ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு ஒப்புதல்... மீண்டும் நெடுவாசலில் தொடங்கியது போராட்டம்
ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்தப்பட மாட்டாது என்று மத்திய அரசு கொடுத்த வாக்குறுதியை மீறியது. இதனால் நெடுவாசலில் மீண்டும் போராட்டம் தொடங்கியது.
புதுக்கோட்டை: ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக நெடுவாசல் கிராம மக்கள் மீண்டும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக 22 நாட்கள் போராட்டம் நடத்தப்பட்டது. மத்திய மாநில அரசுகள் கொடுத்த வாக்குறுதியையடுத்து மக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
கொடுத்த வாக்குறுதியை மீறி ஹைட்ரோ கார்பன் திட்டம் தொடர்பாக கடந்த 27ம் தேதி தனியார் நிறுவனங்களுடன் மத்திய அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது. இதனால் நெடுவாசல் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

ஆலோசனை
இதனைதொடர்ந்து, நெடுவாசல் மற்றும் அதனைச்சுற்றியுள்ள 70 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கடந்த 8ம் தேதி ஆலோசனை கூட்டம் நடத்தினர்.

மீண்டும் போராட்டம்
இந்தக் கூட்டத்தில் மீண்டும் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து, நெடுவாசலில் நேற்று காலை இளைஞர்களும், பெண்களும் போராட்டக்களத்தில் குவிந்தனர்.
இதையறிந்து சென்ற போலீசார், அவர்களை அங்கிருந்து விரட்டினர்.

போலீசார் பதற்றம்
காவல் துறையினரின் அனுமதியை மீறி ஏராளமான பெண்களும், இளைஞர்களும் நெடுவாசலில் போராட்டத்தில் குதித்துள்ளனர். இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் போலீசார் திகைத்து வருகின்றனர்.

எதிர்ப்பு பதாகை
அதன்பின் மாலையில் ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிரான பதாகைகளை கையில் ஏந்தியும், மத்திய மாநில அரசுகளை கண்டித்து கோஷங்களை எழுப்பியவாறும் நெடுவாசல் நாடியம்மன் கோயில் திடலில் மீண்டும் திரண்டு போராட்டத்தை ஆரம்பித்தனர்.

விவசாயிகள் போராட்டம்
இதே போன்று ஆலங்குடி அருகே கீரமங்கலம் பேருந்து நிலையம் அருகே ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்தும், டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் அப்பகுதி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வாக்குவாதம்
இதனைதொடர்ந்து அங்கு வந்த போலீசார் அவர்களை போராட்டத்தை கைவிடும்படி வலியுறுத்தியதால் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து, மாலை 4 மணிவரை போராட்டம் நடத்திவிட்டு கலைந்து சென்றனர்.
-
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான்












Click it and Unblock the Notifications