For Daily Alerts
Just In
போராட்டத்தை அடக்கும்போது வன்முறையாக மாறும்.. கமல்ஹாசன் வார்னிங்
போராட்டத்தை அடக்கும்போது அது வன்முறையாக மாறும் என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
சென்னை: போராட்டத்தை அடக்கும்போது அது வன்முறையாக மாறும் என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
திருச்சியில் நேற்று நடைபெற்ற மக்கள் நீதி மய்யத்தின் பொதுக்கூட்டத்தை தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன் இன்று சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் எதிர்க்கட்சியினர் கைது செய்யப்படுவது அடக்குமுறை என்றார்.
போராட்டத்தை அடக்கும்போது அது வன்முறையாக மாறும் என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்தார். காவிரிக்கான போராட்டம் வன்முறையாகக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.
மத்திய அரசுக்கு எதிராக ஒத்துழையாமை கொள்கையை முன்னெடுப்பதாகவும் கமல்ஹாசன் தெரிவித்தார்.
Comments
English summary
Actor Kamal Haasan said that protest turn to violent when its suppressive. Cauvery protest should not be violent.