கிரானைட் கொள்ளை: பி.ஆர். பழனிச்சாமிக்கு எதிராக வழக்கு போட்டவரின் காருக்கு தீவைப்பு
மதுரை: பி.ஆர்.பி கிரானைட் குவாரி நிறுவனர் பழனிச்சாமிக்கு எதிராக புகார் அளித்த முருகேசன் என்பவரின் காருக்கு தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் மேலூர் சுற்று வட்டாரப்பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் மேலூர் குமார் நகரைச் சேர்ந்தவர் முருகேசன் (வயது 62). குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் கடந்த 2010ம் ஆண்டு கிரானைட் முறைகேடு தொடர்பாக பி.ஆர். பழனிச்சாமி மீது மதுரை செசன்சு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதன் பிறகு முருகேசனுக்கு பல மிரட்டல் போன்கள் வந்தன. இதைதொடர்ந்து கடந்த 2014ம் ஆண்டு இவரது வீட்டிக்கு துப்பாக்கி எந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. ஆனால் ஒரு மாதத்திலேயே போலீஸ் பாதுகாப்பு விலக்கி கொள்ளப்பட்டது.

இந்த நிலையில் நேற்று இரவு 10 மணி அளவில் திடீரென்று வெடிக்கிற சத்தம் கேட்டது. பதற்றமடைந்தவர்கள் வீட்டிற்குள் இருந்து வெளியே ஓடிவந்தனர். அப்போது வீட்டு முன்பு நின்ற முருகேசனின் கார் தீப்பற்றி எரிந்தது. இதுகுறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. மேலூர் தீயணைப்பு நிலைய அதிகாரி கணேசன் தலைமையில் வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். போலீஸ் டி.எஸ்.பி. மங்களேஸ்வரன், இன்ஸ்பெக்டர் முத்து மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.
பி.ஆர்.பி.க்கு எதிராக வழக்கு தொடர்ந்தவரின் காருக்கு தீவைக்கப்பட்ட சம்பவம், மேலூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மதுரையில் நடைபெற்ற கிரானைட் முறைகேடுகள் பற்றி ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் தலைமையிலான குழுவினர் விசாரணை மேற்கொண்டு இறுதி அறிக்கை தயாரித்து வருகின்றனர். நரபலி புகார்கள், பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான இயற்கை வளங்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கிரானைட் முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு சிலமாதங்கள் சிறையில் இருந்து ஜாமீனில் வெளிவந்துள்ளார் பி.ஆர்.பழனிச்சாமி. இந்த நிலையில் பி.ஆர்.பி மீது புகார் கொடுத்தவரின் வீட்டில் கார் எரிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை?












Click it and Unblock the Notifications