கிரானைட் கொள்ளை: பி.ஆர். பழனிச்சாமிக்கு எதிராக வழக்கு போட்டவரின் காருக்கு தீவைப்பு
மதுரை: பி.ஆர்.பி கிரானைட் குவாரி நிறுவனர் பழனிச்சாமிக்கு எதிராக புகார் அளித்த முருகேசன் என்பவரின் காருக்கு தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் மேலூர் சுற்று வட்டாரப்பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் மேலூர் குமார் நகரைச் சேர்ந்தவர் முருகேசன் (வயது 62). குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் கடந்த 2010ம் ஆண்டு கிரானைட் முறைகேடு தொடர்பாக பி.ஆர். பழனிச்சாமி மீது மதுரை செசன்சு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதன் பிறகு முருகேசனுக்கு பல மிரட்டல் போன்கள் வந்தன. இதைதொடர்ந்து கடந்த 2014ம் ஆண்டு இவரது வீட்டிக்கு துப்பாக்கி எந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. ஆனால் ஒரு மாதத்திலேயே போலீஸ் பாதுகாப்பு விலக்கி கொள்ளப்பட்டது.

இந்த நிலையில் நேற்று இரவு 10 மணி அளவில் திடீரென்று வெடிக்கிற சத்தம் கேட்டது. பதற்றமடைந்தவர்கள் வீட்டிற்குள் இருந்து வெளியே ஓடிவந்தனர். அப்போது வீட்டு முன்பு நின்ற முருகேசனின் கார் தீப்பற்றி எரிந்தது. இதுகுறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. மேலூர் தீயணைப்பு நிலைய அதிகாரி கணேசன் தலைமையில் வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். போலீஸ் டி.எஸ்.பி. மங்களேஸ்வரன், இன்ஸ்பெக்டர் முத்து மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.
பி.ஆர்.பி.க்கு எதிராக வழக்கு தொடர்ந்தவரின் காருக்கு தீவைக்கப்பட்ட சம்பவம், மேலூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மதுரையில் நடைபெற்ற கிரானைட் முறைகேடுகள் பற்றி ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் தலைமையிலான குழுவினர் விசாரணை மேற்கொண்டு இறுதி அறிக்கை தயாரித்து வருகின்றனர். நரபலி புகார்கள், பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான இயற்கை வளங்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கிரானைட் முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு சிலமாதங்கள் சிறையில் இருந்து ஜாமீனில் வெளிவந்துள்ளார் பி.ஆர்.பழனிச்சாமி. இந்த நிலையில் பி.ஆர்.பி மீது புகார் கொடுத்தவரின் வீட்டில் கார் எரிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications