அணு உலைகள் அனைத்தும் பாதுகாப்பாக இருக்கிறது அதுகுறித்த அச்சம் வேண்டாம் : ஜிதேந்தர் சிங்
டெல்லி: நாடு முழுவதிலும் உள்ள அணு உலைகள் அனைத்தும் முழு அளவில் பாதுகாப்பாக இருப்பதாக அணு சக்தி மற்றும் விண்வெளித் துறை மத்திய இணையமைச்சர் ஜிதேந்தர் சிங் தெரிவித்துள்ளார்.
'கதிர்வீச்சு பாதுகாப்பு குறித்து மக்களுக்கு கல்வி அளித்தல்' தொடர்பான கருத்தரங்கம் தலைநகர் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு ஜிதேந்தர் சிங் பேசினார். அப்போது அவர் கூறுகையில், அணு உலைகள் குறித்து அச்சப்பட வேண்டாம். அணு உலைகள் அனைத்திலும் பாதுகாப்பு விதிமுறைகள் முழுமையாக பின்பற்றப்படுவதாகக் கூறினார்.

மேலும், நாட்டின் மின்சார தேவைகளை பூர்த்தி செய்ய அணு உலைகள் தான் மிகப்பெரிய வாய்ப்பாக இருக்கும். எனவே, அணு உலைகளின் பயன்கள் குறித்து நாட்டு மக்களிடம் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக ஜிதேந்தர் சிங் தெரிவித்தார்.
சில நேரங்களில் புதிய அணு உலைகள் அமைக்கும் போது, அந்த பகுதியில் உள்ள மக்களின் எதிர்ப்பு காரணமாக பணிகள் முடங்கிவிடுகிறது. அணுசக்தித் துறையினர் காவல்துறையினர் மற்றும் சில சமூக ஆர்வலர்களின் உதவியுடன் இந்த எதிர்ப்புகள் சரிசெய்யப்பட்டு வருகிறது.
அறிவியல் சார் குழுக்கள், சமூக விஞ்ஞானிகள் மற்றும் தன்னார்வ நிறுவனங்கள் உதவியுடன் சமூகத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களுக்கும் அணு ஆற்றல் குறித்து விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டும் என அவர் கூறினார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications