”புல்” மப்பில் இருந்த போலீசாருக்கு தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்
பெரம்பலூர்: வேலை நேரத்தில் புல் "மப்பில்" இருந்த காவல்துறையினர் மீது பொதுமக்கள் தாக்குதல் நடத்தியதில் 2 போலீசாரின் மண்டை உடைந்த சம்பவம் பெரம்பலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று நாடாளுமன்ற தேர்தலுக்கான பாதுகாப்பு பணியில் பெரம்பலூர் ஆயுதப்படையை சேர்ந்த போலீஸார் ஈடுபட்டிருந்தனர். இரவு சரியாக 10.30 மணிக்கு மேல் ஆயுதப்படையைச் சேர்ந்த தலைமைக்காவலர்களான ரத்னா, பிரம்மா, வேலு, முத்தையா இவர்களுடன் வாகனப்பிரிவு உதவி ஆய்வாளர் ராமச்சந்திரன் ஆகிய ஐந்து பேரும் பெரம்பலூரில் உள்ள ஹோட்டலில் குடிபோதையில் சாப்பிட சென்றுள்ளனர்.
அப்போது துறையூர் வழியே உறவினர் வீட்டு விசேஷத்துக்கு சென்றுவிட்டு லாரியில் திரும்பிய 30க்கும் மேற்பட்டவர்களும், அதே ஹோட்டலுக்கு சாப்பிட வந்துள்ளனர்.
அப்போது லாரியில் வந்தவர்கள் அவர்களுக்குள் சத்தம் போட்டுக்கொன்டு வாக்குவாதம் செய்வதுபோல் பேசியிருக்கிறார்கள். இதை கேட்டு போதையிலிருந்த போலீஸ் முத்தையா, அசிங்கமான வார்த்தைகளால் திட்டி, "என்னடா சண்டை போட்டுக்கிறீங்க" என கேட்க, "அதை கேட்க நீயாருடா" என்று லாரியில் வந்தவர்கள் கேட்டிருக்கின்றனர்.
இதையடுத்து அங்கிருந்த ஹோட்டல் பணியாளர்கள், "அவங்க போலீஸ்காரங்கப்பா" என சொல்ல உடனே பொதுமக்கள் அமைதியாகி தொடர்ந்து சாப்பிட்டு கொண்டிருந்தனர்.
அப்போது போதை தலைக்கேறிய போலீஸ் முத்தையா " டேய்! போலீசையே எதிர்த்து பேசுறீங்களாடா " என்றபடி ஹோட்டலைவிட்டு வெளியே வந்து கீழே கிடந்த கல்லை எடுத்து லாரியில் வந்தவர்கள் மீது வீச அதில் ஒருவரின் மண்டை உடைந்து விட்டதாம்.
உறவினருக்கு ரத்தம் வடிவதை பார்த்த மற்றவர்கள் இனியும் விடக்கூடாது என போதையிலிருந்த போலீசாரை நைய புடைந்துவிட்டனர்.
இந்த தாக்குதலில் தலைமைக்காவலர்கள் பிரம்மாவும், முத்தையாவும் பலத்த காயமடைந்தனர். இருவருக்கும் மண்டை உடைந்தது. மற்ற மூன்று போலீசாரும் பொதுமக்களின் தாக்குதலுக்கு பயந்து ஓடிவிட்டனர். பிறகு அந்த கும்பல் அங்கிருந்து புறப்பட்டு சென்று விட்டது. அவர்கள் யார், எந்த ஊரை சேர்ந்தவர்கள் என எதுவும் தெரியவில்லை.
மண்டை உடைந்த போலீசார் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளார்கள். இந்த சம்பவம் குறித்து பெரம்பலூர் எஸ்.பி. சோனல் சந்திராவின் கவனத்துக்கு சென்றதை அடுத்து சம்மந்தப்பட்ட காவலர்களை அழைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications