நெல்லை சிறுவன் பலாத்கார வழக்கு: பிரிட்டீஷ் பாதிரியாருக்கு ஆண்மை சோதனை நடத்த அரசு தரப்பு மனு
நெல்லை: சிறுவனை பலாத்காரம் செய்த வழக்கில் பிரிட்டீஷ் பாதிரியாருக்கு ஆண்மை பரிசோதனை நடத்த வேண்டும் என்று அரசு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே தளபதிசமுத்திரத்தை அடுத்த சின்னம்மாள்புரத்தில் ஒரு குழந்தைகள் காப்பகம் உள்ளது. இதில் 50க்கும் மேற்பட்ட ஆதரவற்ற சிறுவர், சிறுமிகள் உள்ளனர். இந்த காப்பத்தை பிரிட்டனைச் சேர்ந்த கிறிஸ்தவ பாதிரியாரான ஜொனாதன் ராபின்சன் (73) என்பவர் நடத்தி வந்தார்.

ராபின்சன் அவ்வப்போது இந்தியாவுக்கு வருவாராம். அப்போது இந்த காப்பத்தில் இருந்து ஏதாவது ஒரு சிறுவனை அழைத்துச் சென்று அவனிடம் ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவதாக பரபரப்பு புகார் எழுந்தது. இந்த நிலையில் மார்ச், ஏப்ரல் மாதங்களில் ஜானதன் ராபின்சன் இந்த காப்பகத்திற்கு வந்தார். காப்பகத்தில் இருந்த 15 வயது சிறுவனை அவர் அழைத்து சென்றுள்ளார்.
ஏப்ரல் 13ம் தேதி சிறுவனை, டெல்லிக்கு அழைத்து சென்று அங்கு ஒரு விடுதியில் வைத்து அவனிடம் தவறாக நடந்துள்ளார். தொடர்ந்து ஒரிசா, சிம்லா போன்ற இடங்களுக்கு அழைத்து சென்று அங்கும் அவனிடம் தவறாக நடந்தாராம். பாதிக்கப்பட்ட சிறுவன் மூலம் இந்த விவகாரம் பெங்களூரில் உள்ள ஜஸ்டிஸ் அன்டு கேர் என்ற குழந்தை பாதுகாப்பு அமைப்புக்கு தெரிய வந்தது. அந்த அமைப்பினர் இது பற்றிய தகவல்களை சேகரித்து சிறுவனை மீட்டனர்.
தலைமறைவாக இருந்த ராபின்சனுக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்ட நிலையில், கடந்த வியாழக்கிழமை வள்ளியூர் குற்றவியல் நீதிமன்றத்தில் அவர் ஆஜரானார். இதையடுத்து, வெள்ளிக்கிழமைக்கு வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது. அன்றையதினம், உள்ளூர் பிரமுகர்கள் ராமர் மற்றும் சுடலை ஆகியோர் கொடுத்த, தலா ரூ.50 ஆயிரம் பிணை மூலம் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
இன்று, வழக்கு மீண்டும் நீதிபதி ரஷ்கின்ராஜ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பு சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதன்படி, இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கைவிடுக்கப்பட்டது. மேலும், இத்தனை வருடங்களாக தலைமறைவாக இருந்ததால், ராபின்சனுக்கு ஆண்மை பரிசோதனை நடத்த வேண்டும் என்றும் அதில் கோரப்பட்டிருந்தது.
இந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி, வழக்கை டிசம்பர் 2ம் தேதிக்கு ஒத்திவைத்தார் (புதன்கிழமை). அன்றைய தினம், இந்த மனுவை எதிர்த்து ராபின்சன் தரப்பு வாதம் முன்வைக்கும் என்று தெரிகிறது. மேலும்,
வழக்கு விசாரணையை தொடர்ந்து நடத்த வேண்டும், ராபின்சனுக்கு, நேரில் ஆஜராகுவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று ராபின்சன் தரப்பு தாக்கல் செய்த மனுவும் அன்று விசாரணைக்கு வருகிறது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications