கோவளம் துறைமுக திட்டத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு: பொதுமக்கள் போராட்டத்தால் பதட்டம்-போலீஸ் குவிப்பு
கோவளம் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராடி வருவதால் பதட்டம் நிலவுகிறது.
கன்னியாகுமரி: கோவளம் கடற்கரை பகுதியில் துறைமுகம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொது மக்கள் போராடி வருவதால் அங்கு பதற்றம் உருவாகியுள்ளது.
கன்னியாகுமரி கோவளம்-கீழமணக்குடி அருகே மத்திய அரசு சார்பில் பன்னாட்டு சரக்கு பெட்டக முனையம் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சரக்கு பெட்டக மாற்று முனையம் எதிர்ப்பு மக்கள் இயக்கம் சார்பில் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

இன்று காலை ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை உள்ள கடல் பகுதியில் மீனவர்களும், பெண்களும் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டக்காரர்கள் கன்னியாகுமரி கடலில் திருவள்ளுவர் சிலையை முற்றுகையிடலாம் என் வதந்தி பரவியது.
இதுகுறித்து போராட்ட குழு ஒருங்கிணைப்பாளர் பார்த்தசாரதி கூறுகையில், கடல் முற்றுகை போராட்டத்தில் 40 மீனவ கிராமங்களை சேர்ந்தவர்கள் பங்கேற்றுள்ளனர். சரக்கு பெட்டக முனையம் நிறுவினால் இப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.

ஏராளமானோர் நிலங்கள் மற்றும் குடியிருப்புகளை இழக்க வேண்டிய நிலை ஏற்படும்; சுற்று சூழல் மாசு ஏற்படும் என்றும் அவர் தெரிவித்தார். போராட்டம் தொடர்வதால் அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications