நெல்லை: கேரளா மீன்கழிவுகளை கொட்ட வந்த லாரி... சோதனை சாவடியில் மடக்கி பிடித்த பொதுமக்கள்
நெல்லை அருகே மீன் கழிவுகளை கொட்ட வந்த லாரியை பொதுமக்கள் அளித்த தகவலின்பேரில் போலீசார் மடக்கி பிடித்தனர்.
நெல்லை: நெல்லை அருகே மீன் கழிவுகளை கொட்ட வந்த லாரியை பொது மக்கள் அதிரடியாக மடக்கி பிடித்தனர்.
தமிழக-கேரள எல்லையான நெல்லை மாவட்டம் புளியரை சோதனை சாவடி வழியாக கேரளாவுக்கு தினமும் ஆயிரக்கணக்கான சரக்கு வாகனங்கள் சென்று வருகின்றன. கேரள மக்களுக்கு தேவையான அத்தியவாசிய பொருட்களான பால் முதல் சிமிண்ட் வரை தமிழகத்திலிருந்து செல்கிறது.

இவ்வாறு செல்லும் லாரிகள் திரும்ப வரும் போது கேரள இறைச்சி கழிவுகள் மற்றும் மருத்துவ கழிவுகளை கொண்டு வந்து தமிழக எல்லையில் கொட்டுவது வாடிக்கையாகி வருகின்றது. இதனால் அந்த பகுதியில் வசித்து வரும் பொது மக்கள் தோல் நோய் மற்றும் பல்வேறு தொற்று நோய்களுக்கு ஆளாகி வருகின்றனர்.
கேரளாவில் இருந்து வரும் போது சோதனை சாவடியில் லாரிகள் பிடிபட்டால் கேரளாகவுக்கே திருப்பி அனுப்பும் சம்பவமும் அடிக்கடி நடந்து வருகிறது.
இந்நிலையில் இரவு 8 மணி அளவில் கேரளாவில் இருந்து நெல்லை மாவட்ட எல்லைக்குள் நுழைந்த ஒரு லாரியில் இருந்து தூர்நாற்றம் வீசவே சந்தேகம் அடைந்த பொது மக்கள் அருகில் சென்று பார்த்த போது அதிர்ச்சியில் உறைந்தனர். அதில் புழுக்கள் கொத்து கொத்தாக ரோட்டில் விழுந்து கிடந்துள்ளது.
இதுகுறித்து உடனடியாக புளியரை சோதனை சாவடியில் பணியில் இருந்த போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக களத்தில் குதித்த போலீசார் லாரியை புளியரை போக்குவரத்து சோதனை சாவடி அருகே மடக்கி பிடித்தனர்.
லாரியை பணகுடியை சேர்ந்த முத்துகுமார் என்பவர் ஓட்டி வந்ததும் அதில் மீன் கழிவுகளை கேரளாவில் இருந்து ஏற்றி வந்ததும் தெரிய வந்தது. இதை தொடர்ந்து லாரி பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து சுகாதார துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் இருந்து உணவுப்பொருட்களை பெற்றுக்கொள்ளும் கேரளா அங்கிருந்து கழிவுகளை கொட்டுவதற்கு தமிழகத்தை குப்பை கிடங்காக பயன்படுத்தி வருகிறது. தமிழக லாரி டிரைவர்களும் பணத்திற்கு ஆசைப்பட்டு கழிவுகளை ஏற்றிக்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications