டாக்டர்கள் பற்றாக்குறையைக் கண்டித்து பொதுமக்கள் போராட்டம்
ஸ்ரீமுஷ்ணம்: பாளையங்கோட்டை அருகே டாக்டர்கள் பற்றாக்குறையை கண்டித்து பொதுமக்கள் ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள பாளையங்கோட்டை கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இங்கு அதனைச் சுற்றியுள்ள மேல்பாதி, வடக்குபாளையம், சோழத்தரம், புடையூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்வது வழக்கம். இங்கு 2 டாக்டர்கள் மற்றும் 4 செவிலியர்கள் பணிபுரிந்தனர்.

இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு டாக்டர் வேறு ஊருக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இதனால் ஒரே ஒரு டாக்டர் மட்டுமே இங்கு பணிபுரிந்து வந்தார். இவரும் விடுமுறை, மருத்துவ முகாம் போன்ற காரணங்களால் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு முறையாக பணிக்கு வரவில்லை என கூறப்படுகிறது. இதனால் இங்கு சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
இது தொடர்பாக அதிகாரிகளிட முறையிட்டும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் ஊராட்சி மன்ற தலைவர்கள் கீழ்பாதி வெங்கடகிரி, மேல்பாதி வைத்திலிங்கம் ஆகியோர் தலைமையில் ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு ஒன்று திரண்டு மருத்துவமனையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications