'ஜஸ்ட்' அரை மணி நேரத்தில் முடிந்து போன புதுச்சேரி சட்டசபைக் கூட்டம்!

இந்த ஆண்டின் கடைசிக் கூட்டமாக இன்று புதுச்சேரி சட்டசபைக் கூட்டப்பட்டது. பிற்பகல் 12.30 மணியளவில் கூட்டத்தைக் கூட்டினர். முதல்வர் ரங்கசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சில திட்டங்கள் வாசிக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து சபை காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் சபாபதி அறிவித்தார். அப்போது மணி ஒன்று. இதனால் காங்கிரஸ் உறுப்பினர்கள் ஆவேசமடைந்தனர்.
புதுச்சேரியில் சட்டம் ஒழுங்கு பிரச்னை உள்ளது. அரசு பணியில் இருந்து விலக்கப்பட்ட 4 ஆயிரம் ஊழியர்களுக்கு திரும்ப வேலை வாய்ப்பு வழங்கவில்லை. மேலும் புதுச்சேரி சட்டசபையில் விவாதிப்பதற்கு பல பிரச்னைகள் உள்ளது. ஆனால், அது எதையும் செய்யாமல் வெறும் அரை மணி நேரத்தில் சட்டசபையை முடித்து விடுவது எந்தவிதத்தில் நியாயம். எனவே, நாளைக்கும் சட்டசபை கூட்டம் நடத்த வேண்டும் என்று அவர்கள் கூட்டமாக எழுந்து கோஷமிட்டனர். ஆனால் சபாபதி கேட்கவில்லை.
இதையடுத்து காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 6 பேரும் முன்னாள் முதல்வர் வைத்திலிங்கம் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் குதித்தனர்.
அதேசமயம், அதிமுகவில் அரை மணி நேரக் கூட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்புச் செய்தனர். அதிமுக எம்.எல்.ஏ. ஓம்சக்தி சேகர், தனது தொகுதிக்கு சரியான முறையில் மேம்பாட்டு நிதி ஒதுக்கவில்லை என்றுக்கூறி சட்டசபை முன்பு தரையில் அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டார்.
பின்பு சபாநாயகர் சபாபதி, கூடிய விரைவில் நிதி ஒதுக்குவதாக உறுதியளித்தார். இதையடுத்து ஓம்சக்தி சேகர் தனது முற்றுகை போராட்டத்தை கைவிட்டுக் கிளம்பினார். ஆனால் காங்கிரஸார் போகவில்லை.
முன்னதாக சபை தொடங்கியதும் அதிமுக உறுப்பினர் அன்பழகன் பேசுகையில், இலவச வேட்டி-சேலை வழங்கப்படவில்லை, வெள்ளை அரிசி வழங்கப்படவில்லை, அறிவித்த திட்டங்கள் பல நிறைவேற்றப் படவில்லை. இதுபோல் பல பிரச்சினைகள் உள்ளது. இவற்றை சபையில் விவாதிக்க வேண்டும் என்றார்.
அதற்கு சபாநாயகர், சபை மரபுகளை மதிக்க வேண்டும். மூத்த உறுப்பினரான உங்களுக்கு சபை மரபுகள் நன்றாக தெரியும். தற்போது இரங்கல் தீர்மானத்தை எடுத்து கொள்வோம் என்றார்.
இதையடுத்து அன்பழகன் எம்.எல்.ஏ. பேசுவதை கைவிட்டு இருக்கையில் அமர்ந்தார். பின்னர் இரங்கல் தீர்மானம் வாசித்து நிறைவேற்றப்பட்டது. அப்போது மீண்டும் அன்பழகன் பேச எழுந்தார். ஆனால் சபாநாயகர் அனுமதிக்கவில்லை. இதையடுத்து அன்பழகன் உள்ளிட்ட அதிமுக உறுப்பினர்கள், வெளிநடப்பு செய்வதாக கூறி வெளியேறினர்.
-
பேப்பரை அடித்து திருத்திய ராகுல்.. தமிழக காங்கிரஸ் வேட்பாளர்களை.. இன்னும் தேர்வு செய்யாதது ஏன்? -
கடைசி பஸ் பிடிக்க போற மாதிரி அவசரப்பட்டது எல்லாம்.. இதுக்குத்தானா? வேட்பாளரை அறிவிக்காத காங்கிரஸ்! -
பாஜக vs காங்கிரஸ்! நேருக்கு நேர் மோதலில் மோடி க்ளீன் ஸ்வீப்.. பரிதாபமான நிலையில் ராகுல்! புதிய சர்வே -
கேரளா போனவருக்கு.. இங்கே வர டைம் இருக்காதா.. சொதப்பும் காங்.. ஸ்டாலினை தவிக்கவிடுகிறாரா ராகுல்? -
நோட்டுக்கு சீட்டு..கதர் கட்சியில் கை ஓங்கும் தலைகள்! லிஸ்டை பார்த்து கண் சிவந்த ராகுல்! பரபர டெல்லி! -
ரொம்ப மன உளைச்சல்.. மேடையிலேயே பதவியை ராஜினாமா செய்த அதிமுக நிர்வாகி.. கள்ளக்குறிச்சியில் பரபரப்பு -
இதென்ன லிஸ்ட்.. வேலைக்கு ஆகாது.. தமிழக காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை.. விட்டு வீசிய ராகுல் காந்தி -
பாஜக சிம்ப்ளி வேஸ்ட்.. திருமாவளவன் பெஸ்ட்.. புயலை கிளப்பிய வால்பாறை அதிமுக வேட்பாளர் ஆடியோ -
தீராத "கேரளா" தலைவலி.. வென்றாலும் கூட நிம்மதியாக இருக்க முடியாது! என்ன செய்ய போகிறார் ராகுல்? -
கன்னியாகுமரியில் கடன் தந்த வங்கிக்கு ட்விஸ்ட் தந்த காங்கிரஸ் பெண் பிரமுகர்.. பாய்ந்த வழக்கு -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம்











Click it and Unblock the Notifications