தடுப்பூசி போட்டும் பயனில்லை... ரேபிஸ் பாதித்தவர் மருத்துவமனையில் அனுமதி..
புதுக்கோட்டை:தடுப்பூசி போட்டும் பயனில்லாமல் ரேபிஸ் பரவியதால் பாதிக்கப்பட்டவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
நாய்க்கடிக்கு தடுப்பூசி போட்டும் பயனின்றி புதுக்கோட்டையைச் சேர்ந்த பாண்டி என்பவர் "ரேபிஸ்" வைரஸ் பாதிப்பால் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அறந்தாங்கி கைலாசபுரத்தைச் சேர்ந்த அடைக்கலத்தின் மகன் பாண்டி. சமையல் வேலை பார்க்கிறார். இவரை வீட்டு நாய் காலில் கடித்ததால் இரண்டு தடுப்பூசிகளை அடுத்தடுத்து போட்டார்.
இந்நிலையில், தொடர் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அவர் மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
ரத்தப் பரிசோதனையில் பாண்டிக்கு ரேபிஸ் வைரஸ் பரவியிருப்பது தெரிந்தது. உடனடியாக டாக்டர்கள், நர்சுகள், உறவினர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. பிற நோயாளிகளுக்கு போடவில்லை.
டாக்டர்கள் கூறுகையில், ''கடியின் ஆழத்தைப் பொறுத்து தடுப்பூசியுடன் கடிபட்ட இடத்தைச் சுற்றி, 'இம்யுனோ குளோபுலின்' புரதமும் செலுத்த வேண்டும். சிலர், மருத்துவமனைக்கு வரும் போது "நாய் கடித்து விட்டது" என்று மட்டும் சொல்லி ஆன்டிரேபிஸ் தடுப்பூசி போடுவர். கடிபட்ட இடத்தை டாக்டரிடம் காண்பித்தால்தான் உரிய முறையில் சிகிச்சை அளிக்க முடியும்,'' என்றனர். தற்போது பாண்டி, தீவிர சிகிச்சையில் அனுமதிக்க பட்டு உள்ளார்.












Click it and Unblock the Notifications