சைன்டிஸ்டு செல்லூர் ராஜூ, புறா தலையன் ஜெயக்குமார், பாலிவுட் ஆக்டர் உதயகுமார்.. புகழேந்தி விமர்சனம்
Recommended Video
சென்னை: அதிமுக அமைச்சர்களை தினகரன் ஆதரவாளர் புகழேந்தி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். அதிலும் ஜெயக்குமாரின் உருவத்தை வைத்து அவர் கிண்டல் செய்துள்ளது கட்சியினருக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
தினகரன் ஆதரவாளர் புகழேந்தி சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில் திருமங்கலத்தில் ஆர் பி உதயகுமார் மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்களால் வாக்குவாதம் ஏற்பட்டு கூட்டுறவு தேர்தலையே சரியாக முடிக்க முடியாத நிலை ஏற்பட்டது.
இப்படிப்பட்ட இவர்கள் எப்படி கட்சியை காப்பாற்ற போகிறார்கள். இவர்களால் ஒன்றுமே செய்ய முடியாது. அதிமுக கட்சியை காப்பாற்றுவதற்காக ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் பதவியில் இருப்பதாக நினைக்கிறீர்களா. இல்லை. பதவி இல்லாவிட்டால் அவர்கள் செய்த முறைகேடுகள் வெளியே வர தொடங்கிவிடுமே. அதற்காகவே கட்சி நடத்தி வருகின்றனர்.
மணல் கொள்ளை
அதிமுகவை தினகரனால் மட்டுமே காப்பாற்ற முடியும். தமிழகத்தில் நடக்கும் பிரச்சினைகளை சமாளிக்க முடியாமல் அதை நியாயப்படுத்த சில தவறான உதாரணங்களை பழனிச்சாமி கூறி வருகிறார். கரூர் மாவட்டத்தில் மணல் அள்ளியதில் போக்குவரத்து அமைச்சர் விஜயபாஸ்கருக்கும் பங்கு உண்டு.
வரிசையாக மாட்டுவர்
அதுமட்டுமில்லை, மணல் எங்கெல்லாம் அள்ளுகிறார்களோ அங்கெல்லாம் அனைத்து அமைச்சர்களுக்கும் பங்கு உண்டு. தினகரன் தலைமையிலான ஆட்சி விரைவில் தமிழகத்தில் மலரும். அப்போது இந்த பிரச்சினைகளுக்கு முடிவு கட்டுவோம். செய்த தவறுகளுக்கு அனைவரும் வரிசையாக மாட்டுவார்கள் பாருங்கள்.
ஜெயக்குமார்
திருப்பரங்குன்றத்தில் அதிமுக டெபாசிட்டை மட்டும் பெற்றுவிட்டால் போதும் நாங்கள் அரசியலை விட்டே செல்கிறோம். 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் தொடர்பாக நீதிமன்ற தீர்ப்புக்காகவே காத்துக் கொண்டிருக்கிறோம். இங்கு கொள்ளையடிக்கும் பணத்தை வெளிநாடுகளில் சென்று பதுக்கவே இந்த ஜெயக்குமார் வெளிநாடு சென்றுள்ளார்.
காமெடியன்கள்
அதிமுகவில் உள்ளவர்களை மக்கள் காமெடியன்களை போல் பார்க்கிறார்கள் என்றார் புகழேந்தி. அதுமட்டுமல்லாமல் 'பாலிவுட் ஆக்டர்' ஆர்.பி.உதயகுமார், 'சைன்டிஸ்டு' செல்லூர் ராஜூ, 'புறா தலையன்' ஜெயக்குமார் என்று கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்கூறியுள்ளார்.