திமுகவில் இருந்து அதிமுகவுக்கு சென்ற புலவர் செங்குட்டுவனுக்கு தலைமை செயற்குழு உறுப்பினர் பொறுப்பு
Subscribe to Oneindia Tamil

இது குறித்து அதிமுக பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது,
கடலூர் கிழக்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்க இணைச் செயலாளர் பொறுப்பில் கடலூர் இரா. ராஜேந்திரன் (கடலூர் ஓ.டி. தெற்கு கல்லறை தெரு) நியமிக்கப்பட்டுள்ளார்.முன்னாள் அமைச்சர் புலவர் செங்குட்டுவன் அதிமுக தலைமை செயற்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். ஈரோடு மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி துணைச் செயலாளர் பொறுப்பில் எஸ்.கே. நரேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
தஞ்சாவூர் வடக்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் பொறுப்பில் ஏ.விஜயகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். அந்தமான் மாநில அதிமுக அவைத் தலைவராக பி.ஆர். கணேசன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர்களுக்கு அதிமுக நிர்வாகிகள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications