For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இன்று பூலித் தேவரின் 301வது பிறந்த நாள்... தலைவர்கள் மரியாதை... பலத்த போலீஸ் பாதுகாப்பு !

Google Oneindia Tamil News

திருநெல்வேலி: சுதந்திரப் போராட்ட வீர்ர் பூலித்தேவர் 301வது பிறந்த நாள் விழா இன்று நடைபெறுவதால் நெல்லை மாவட்டம் சிவகிரி பகுதியில் பலத்த போலீஸ் பாதுக்காப்பு போடப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டம் சிவகிரி அருகே நெல்கட்டும்செவல் என்ற கிராமத்தில் சுதந்திர போராட்ட வீர்ர் பூலித்தேவரின் 301வது பிறந்த நாள் விழா நடைபெறுகிறது. காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் சமுதாயத் தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளனர். பிறந்த நாள் விழாவில் பல்வேறு தலைவர்கள் பங்கேற்க உள்ளதால் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Pulidevar's 301st birthday celebration

மேலும், நெல்லை ராமையன்பட்டி, கங்கைகொண்டான், திருவேங்கடம், நடுவப்பட்டி, கரட்டுமலை, சங்கரன்கோவில், என்ஜிஓகாலனி, புளியங்குடி, சிந்தாமணி டோல்கேட், வாசுதேவநல்லூர், வேலாயுதபுரம், தலைவன் கோட்டி உள்ளிட்ட பல பகுதிகளில சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு தீவிர சோதனையும் செய்யப்பட்டு வருகிறது.

Pulidevar's 301st birthday celebration

சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுவதை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிவகிரி, சங்கரன்கோவில், கடையநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் மதுக்கடைகள் இன்று மூடப்பட்டுள்ளன.

English summary
Freedom fighter Pulidevar's 301st birthday celebrates in Tirunelveli
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X