நன்றி தெரிவிக்க சென்ற அமைச்சர்.., நன்றி வேண்டாம் குடிக்க தண்ணீர் தாங்கன்னு கேட்ட மக்கள் !
திருச்சி: திருச்சி மாவட்டத்தில் வாக்காளர்களுக்கு நன்றி சொல்ல வந்த அமைச்சர் வளர்மதியிடம் பொதுமக்கள் உப்பு தண்ணீர் நிரம்பிய பாட்டிலை கொடுத்து குடிக்க சொன்ன சம்பவம் நிகழ்ந்துள்ளது.
நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வளர்மதி, தமிழக அமைச்சரவையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக பதவி வகிக்கிறார்.
இந்நிலையில், இன்று ஸ்ரீரங்கம் தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்க வந்தார். அப்போது கரையாம்பட்டி என்ற கிராமத்திற்கு சென்ற அமைச்சர் வளர்மதியிடம் பொதுமக்கள் தரமான குடிநீர் கேட்டு கோரிக்கை மனு அளித்தனர்.
மேலும், மக்கள் தாங்கள் அன்றாடம் குடிக்கும் உப்புத் தண்ணீரை அமைச்சரிடம் கொடுத்து குடிக்கச் சொன்னார்கலாம். அதோடு மட்டுமல்லாமல் எங்களுக்கு நன்றியெல்லாம் வேணாம், இந்த தண்ணிய நீங்க குடிப்பீங்களா தினமும் நாங்கள் இதைத்தான் குடிக்கிறோம் எனக் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.
நன்றி தெரிவிக்க இடத்தில் இப்படி திடீரென மக்கள் கேள்வி எழுப்பியதால், குடீநீர் பிரச்சனையை தீர்க்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் வளர்மதியும் கூறிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.