டிவிக்கு ‛செக்’ வைத்த தேர்தல் ஆணையம்.. தென்காசியில் இரட்டை இலையில் போட்டி! மனம் மாறிய கிருஷ்ணசாமி
தென்காசி: வரும் லோக்சபா தேர்தலில் தென்காசி தனி தொகுதியில் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் போட்டிடுவதாக புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி அறிவித்துள்ளார்.
தமிழகம், புதுச்சேரியில் ஏப்ரல் 19ல் ஒரே கட்டமாக லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுத்தாக்கல் இன்றுடன் முடிவடைந்துவிட்டது. நாளை வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை தொடங்கி நடைபெற உள்ளது.

இந்நிலையில் தான் அதிமுக கூட்டணியில் புதிய தமிழகம் கட்சிக்கு தென்காசி (தனி) தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த தொகுதியில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி போட்டியிடும் நிலையில் வேட்புமனு தாக்கலும் செய்துள்ளார்.
மேலும் தேர்தலில் புதிய தமிழகம் கட்சி தனி சின்னத்தில் போட்டியிடும் என கிருஷ்ணசாமி அறிவித்தார். மேலும் டிவி சின்னத்தை ஒதுக்கீடு செய்யும்படி கிருஷ்ணசாமி இந்திய தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பம் செ்தார். ஆனால் தேர்தல் ஆணையம் டிவி சின்னத்தை ஒதுக்கீடு செய்ய மறுத்துவிட்டது. இதனால் கிருஷ்ணசாமி டிவி சின்னத்துக்கு பதில் புதிய சின்னத்தில் போட்டியிட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் தான் தற்போது கிருஷ்ணசாமியின் மனம் மாறிவிட்டது. அதாவது தனிச்சின்னத்தில் போட்டியிடும்பட்சத்தில் வெற்றி வாய்ப்பு குறையலாம். இதனால் வரும் லோக்சபா தேர்தலில் தென்காசி தொகுதியில் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவதே சிறப்பானது என அவர் நினைத்தார். இரட்டை இலை சின்னம் என்பது மக்களுக்கு நன்கு பரீட்சயமான சின்னம். இதனால் இரட்டை இலையில் போட்டியிட உள்ளதாக கிருஷ்ணசாமி அறிவித்துள்ளார்.
பாஜக கூட்டணியில் இந்த தென்காசி தொகுதி ஜான்பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதோடு ஜான் பாண்டியன் தான் வேட்பாளராக போட்டியிடுகிறார். அவர் பாஜகவின் தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறார். அரசியலில் ஜான் பாண்டியன் மற்றும் கிருஷ்ணசாமி எதிரெதிர் துருவங்களாக உள்ள நிலையில் இருவரும் தென்காசியில் வெற்றிக்கு மல்லுக்கட்ட உள்ளனர்.
இவர்கள் தவிர இந்த தொகுதியில் திமுக சார்பில் ராணி ஸ்ரீகுமாரும், நாம் தமிழர் கட்சி சார்பில் இசை மதிவாணனும் போட்டியிடுகின்றனர். ராணி ஸ்ரீகுமார் உதயசூரியன் சின்னத்தில் களமிறங்கும் நிலையில் இசை மதிவாணன் மைக் சின்னத்தில் தேர்தலை சந்திக்க உள்ளார். இவர்கள் தவிர சுயேச்சைகளும் களமிறங்கி உள்ளதால் தென்காசி லோக்சபா தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது? -
அண்ணாமலை + நயினார் + வானதி.. தோல்வி பயத்தில் தொகுதி மாற தயாராகும் பாஜக தலைவர்கள்.. இத்தனை பேரா?












Click it and Unblock the Notifications