வெள்ளம் வடிந்தது.. 48 மணி நேரத்திற்கு பிறகு ஒளிபரப்பை தொடங்கிய புதிய தலைமுறை, ஜெயா பிளஸ்!
சென்னை: வெள்ள நீர் புகுந்ததால், நேற்று முன்தினம் முதல் செயல்படாமல் இருந்த புதிய தலைமுறை மற்றும் ஜெயா பிளஸ் செய்தி சேனல்கள் 48 மணி நேரத்திற்கு பிறகு இன்று ஒளிபரப்பை தொடங்கியுள்ளன.
புதிய தலைமுறை மற்றும் ஜெயா பிளஸ் ஆகிய இரு சேனல்களுமே, சென்னை, ஈக்காடுந்தாங்கல் பகுதியில், காசி தியேட்டருக்கு ஓரளவு அருகில் உள்ளன.

நேற்றுமுன்தினம் மாலை ஏரி நீர் அதிக அளவுக்கு திறக்கப்பட்டதால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, ஈக்காடுந்தாங்கல் ஏரியாவிற்குள்ளும் புகுந்தது. இந்த வெள்ளநீர் பெருமளவுக்கு, இவ்விரு சேனல் அலுவலகங்களுக்குள்ளும் புகுந்தது.
அடையாறு ஆற்றங்கரையில்தான் இந்த இரு அலுவலகங்களும் அமைந்துள்ளன. அடையாறு ஆற்றில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம் புதிய தலைமுறை, ஜெயா தொலைக்காட்சி அலுவலகங்களில் வெள்ளம் புகுந்தது. பல அடி உயரத்துக்கு அங்கு வெள்ள நீர் தேங்கியது
இதனால், நேற்றுமுன்தினம் மாலை முதல் இவ்விரு சேனல்களும் ஒளிபரப்பை நிறுத்தின. தொழில்நுட்ப கோளாறு காரணமாக, செய்திகளை ஒளிபரப்ப முடியவில்லை என்ற அறிவிப்பு மட்டும் வெளியானது. இந்நிலையில், ஜெயா டிவி காலையிலேயே ஒளிபரப்பை துவங்கிய நிலையில், ஜெயா பிளஸ் சேனல் மாலையில் ஒளிபரப்பை தொடங்கியது.
இதேபோல புதிய தலைமுறை சேனலும், மாலை முதல் ஒளிபரப்பை தொடங்கியுள்ளது. இருப்பினும், தொழில்நுட்ப கோளாறு காரணமாக, அவ்வப்போது புதிய தலைமுறை சேனல் ஒளிபரப்பில் இடைஞ்சல் ஏற்பட்டது.
இரு அலுவலகங்களிலும் வெள்ள நீர் வடிந்துள்ளதாக அதன் ஊழியர்கள் தெரிவித்தனர். பாதுகாப்புக்காக, ஜெயா தொலைக்காட்சி சேனல் ஆபீஸ் வெளியே, பெருமளவுக்கு மணல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.
மழை காரணமாக 2ம் தேதி சென்னையில், தி ஹிந்து எடிசன் நிறுத்தப்பட்டது. அப்பத்திரிகையின் 138 வருட வரலாற்றில் எடிசனை நிறுத்தியது, அதுதான் முதல் முறை. மழை பெய்தால் டிஷ் ஆன்டனாக்களில் நீர் படிந்து டிவிகளில் சேனல்கள் தெரியாமல் சில நிமிடங்கள் போகும்.
ஆனால், டிவி சேனலே 2 நாட்கள் ஒளிபரப்ப முடியாமல் போனது இதுதான் முதல்முறை.
-
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications