வெறும் 10வது படித்து 15 வருடமாக டாக்டராக பணியாற்றிய மாணிக்கவாசகம் கைது!
தென்காசி: தென்காசி அருகே 10வது மட்டுமே படித்து விட்டு கிளினிக் வைத்து டாக்டராக வைத்தியம் பார்த்து வந்த போலி டாக்டரைப் போலீஸார் கைது செய்துள்ளனர்.

தென்காசி அருகே உள்ள ஆய்க்குடி கிருஷ்ணன் கோவில் தெருவில் நாகர் கோவிலை சார்ந்த மாணிக்க வாசகம் என்பவர். கடந்த 15 ஆண்டு காலமாக மருத்துவம் படிக்காமல் 10ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்த இவர், டாக்டராக செயல்பட்டு வந்துள்ளார். கிளினிக்கும் நடத்தி வந்துள்ளார்.

இதுகுறித்து சுகாதாரத் துறைக்குத் தகவல் கிடைத்ததை தொடர்ந்து மாவட்ட சுகாதாரப் பணிகள் இணை இயக்குனர் உத்தரவுப்படி செங்கோட்டை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் ராஜேஷ் கண்ணன், மருத்துவர் வெண்ணிலா மற்றும் போலீசார் மாணிக்க வாசகத்தை கைது செய்து அவரிடமிருந்து ஊசி, மருந்து, மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.

நெல்லை மாவட்டத்தில் டெங்கு பரவலைத் தொடர்ந்து போலி டாக்டர்கள் வேட்டை தீவிரமாகியுள்ளது. இதில் பலர் சிக்கி வருவது குறிப்பிடத்தக்கது. அந்த வரிசையில் இன்று மாணிக்கவாசகம் சிக்கியுள்ளார்.












Click it and Unblock the Notifications