ஆர்.கே. நகரில் போட்டியிடப் போவது தினகரன்?.. 15ம் தேதி கூடுகிறது அதிமுக ஆட்சி மன்றக்குழு
ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் காலியான ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடப் போவது யார் என்பதை முடிவு செய்ய 15ம் தேதி அதிமுக ஆட்சி மன்றக்குழு கூடுகிறது.
சென்னை: ஆர். கே. நகர் இடைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடப் போகும் வேட்பாளர் யார் என்பதை முடிவு செய்ய வரும் 15ம் தேதி அதிமுக ஆட்சிமன்றக்குழு கூடுகிறது.
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் உடல் நலமின்றி கடந்த டிசம்பர் மாதம் 5ம் தேதி மரணம் அடைந்தார். அவர் மறைந்ததையடுத்து, அவர் வென்ற ஆர்.கே. நகர் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, அடுத்த மாதம் 12ம் தேதி இடைத் தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனைத் தொடர்ந்து தேர்தல் நடத்தைவிதிமுறைகள் நடைமுறைக்கு வந்தன.

அதிமுக வேட்பாளர் யார்?
அதிமுகவைப் பொருத்தவரை ஆர்.கே.நகர் மிக முக்கியமான தொகுதி. கடந்த மே மாதம் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு ஜெயலலிதா வென்ற இடம். அதனால் அந்த இடத்திற்கு மீண்டும் யாரை நிறுக்க வைப்பது என்று அதிமுக சார்பில் தீவிரமாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

தினகரன் போட்டியா..
ஜெயலலிதா மறைந்த உடன் சசிகலாதான் ஆர்.கே. நகரில் போட்டியிடுவார் என்ற நிலையில் சொத்துக் குவிப்பு வழக்கில் அவர் சிறை சென்றுவிட்டார். அதற்கு அடுத்த இடத்தில் துணைப் பொதுச் செயலாளராக உள்ள தினகரன் போட்டியிடுவாரா என்ற கேள்வி தினகரனிடமே வைக்கப்பட்டது. அதற்கு ஆட்சிமன்றக்குழு கூடி முடிவு செய்யும் என்று பதில் அளித்தார்.

ஆட்சி மன்றக்குழுக் கூட்டம்
இந்நிலையில், இன்று அதிமுக தலைமை அலுவலகம் சென்ற டிடிவி தினகரன் வரும் 15ம் தேதி அதிமுகவின் ஆட்சிமன்றம் கூட உள்ளது என்று அறிவித்துள்ளார். அப்போது ஆர்.கே. நகர் தொகுதி இடைத் தேர்தல் குறித்தும் வேட்பாளர் யார் என்பது குறித்தும் முடிவு செய்யப்படும் என்றும் அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

எதிர்ப்பார்ப்பு
வரும் 15ம் தேதி அதிமுக ஆட்சி மன்றக் குழு வேட்பாளரை தேர்வு செய்து அறிவிக்க உள்ள நிலையில், அதிமுகவின் வேட்பாளர் யாராக இருப்பார் என்று அதிமுகவினர் காத்துக் கொண்டிருக்கின்றனர். அவர்களைப் போன்றே தமிழக மக்களும் காத்திருக்கின்றனர்.
-
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications