ஆர்.கே. நகர் இடைத்தேர்தல்.. பணப்பட்டுவாடா நடக்கிறதா.. விடிய விடிய தீவிர சோதனை.. போலீசார் அதிரடி
ஆர்.கே. நகரில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளதால் அரசியல் கட்சியினர் பணப்பட்டுவாடாவில் ஈடுபடுகிறார்களா என்பதை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இதற்காக வீடியோ பதிவுடன் கூடிய வாகன சோதனையில் அவர்கள்
சென்னை: ஆர். கே. இடைத்தேர்தல் வரும் 12ம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சியினர் நடத்தும் பணபட்டுவாடாவைத் தவிர்க்க போலீசார் விடிய விடிய வாகன சோதனை நடத்தினர்.
கடந்த டிசம்பர் மாதம் ஜெயலலிதா மரணம் அடைந்தார். அதனைத் தொடர்ந்து ஆர்.கே. நகர் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.
இதனை அடுத்து, ஆர்.கே. நகர் தொகுதியில் வரும் 12ம் தேதி இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து தேர்தல் நடைமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தன.

உரிய ஆவணங்கள் இன்றி…
தேர்தல் விதிமுறைகளின் படி, ஒருவர் 50 ஆயிரத்திற்கு மேல் பணத்தை கொண்டு சென்றால் அதற்குரிய ஆவணத்தை எடுத்துச் செல்ல வேண்டும். பரிசு பொருட்கள் கொண்டு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒருவர் 10 ஆயிரம் ரூபாய் மட்டுமே கொண்டு செல்ல முடியும்.

பணம் பறிமுதல்
அதற்கு மேல் பணத்தைக் கொண்டு செல்பவர்கள் அதற்குரிய ஆவணங்களை வைத்திருக்க வேண்டும். அவ்வாறு இல்லை எனில் பணம் பறிமுதல் செய்யப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் போலீசார் விடிய விடிய வாகனச் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

பணப்பட்டுவாடா
ஆர்.கே. நகர் வாக்காளர்களுக்கு அரசியல் கட்சியினர் பணம் பட்டுவாடா செய்வதை தடுக்க உதவி ஆய்வாளர் தலைமையில் 4 போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஆர்.கே. நகர் முழுவதும் 8 பேர் கொண்ட குழுக்களை அமைத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
வீடியோ பதிவு
கார் மற்றும் இரு சக்கர வாகனங்களை சோதனை செய்யும் போது வீடியோ பதிவு செய்யப்படுகிறது. ஆர்.கே. நகர் தொகுதிக்குட்பட்ட தண்டையார் பேட்டை, வைத்தியநாதன் மேம்பாலம், ஐஓசி பேருந்து நிலையம், புது வண்ணாரப்பேட்டை, சுங்கச்சாவடி பேருந்து நிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் சோதனைச் சாவடிகளை அமைத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications