ஆர்.கே.நகர் தேர்தல் முடிவு அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும்.. சொல்கிறார் முரளிதர ராவ் !
தமிழகத்துக்கு ஒரு புதிய மாற்று அரசியல் தேவைப்படுகிறது. அந்த மாற்று அரசியலை பாஜக-வால்தான் கொடுக்க முடியும் என்று முரளிதர ராவ் தெரிவித்தார்.
சென்னை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் முடிவு தமிழகத்தில் மிகப்பெரிய அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று தமிழக பாஜக பொறுப்பாளர் முரளிதர ராவ் கூறியுள்ளார்.
ஆர்.கே.நகர் தொகுதிக்கு வரும் 12 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் திமுக சார்பில் மருது கணேஷ், சசிகலா அணியின் சார்பில் டி.டி.வி.தினகரன், ஓபிஎஸ் அணி சார்பில் மதுசூதனன், ஜெ.தீபா, தேமுதிக சார்பில் மதிவாணன், பாஜக சார்பில் கங்கை அமரன் உள்ளிட்டோர் முக்கிய வேட்பாளர்களாக களமிறங்கியுள்ளனர்.

இந்நிலையில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலையொட்டி, தண்டையார்பேட்டையில் பாஜக தேர்தல் பணிமனை திறக்கப்பட்டது. தமிழக பாஜக பொறுப்பாளர் முரளிதர ராவ் நேற்று பணிமனையை பார்வையிட்ட பின்னர் பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பாஜக வேட்பாளர் கங்கை அமரன் மற்றும் மாநில நிர்வாகிகள், தேர்தல் பிரிவு நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
ஆலோசனை கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முரளிதர ராவ், தமிழகத்தில் நிலவும் அரசியல் மிகவும் மோசமாக உள்ளது. இடைத்தேர்தலில் பணப் பட்டுவாடா செய்வதை கண்கூடாகவே காண முடிகிறது. பணம் கொடுத்து ஓட்டு பெறும் பழைய நிலைமை மீண்டும் தலைதூக்கியுள்ளது. பணம் இருந்தால் தேர்தலில் வெற்றிபெறலாம் என்று அதிமுக-வினர் நினைக்கிறார்கள். பணப் பட்டுவாடா குறித்து தேர்தல் ஆணையத்திடம் பாஜக சார்பில் புகார்கள் தரப்பட்டிருக்கிறது.
தமிழகத்தில் அதிமுக-வுக்கு மாற்று திமுக என்றும், திமுக-வுக்கு மாற்று அதிமுக என்றும் நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால் உண்மையான மாற்று அது இல்லை. தற்போதுள்ள சூழ்நிலையில், ஒரு புதிய மாற்று அரசியல் தேவைப்படுகிறது. அந்த மாற்று அரசியலை பாஜக-வால்தான் கொடுக்க முடியும். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் முடிவு தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் விதமாக அமையும் என்றார்.
-
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம்.. ஒரு தொகுதியை கொடுங்க.. பியூஷ் கோயலிடம் கேட்ட அண்ணாமலை? -
கடைசி நிமிடத்தில் மாறிய பாஜக எண்கள்! அதிமுக கோட்டையில் ஜாக்பாட்! முழு அதிரடி பலன்கள் இதோ -
"பிராமணர் + வன்னியர் + தேவர்" ஓட்டுக்கு வேட்டு! அதிமுக - பாஜக கூட்டணிக்கு டென்ஷன் ஏற்றும் மூவர் -
மதுரை வடக்கில் சரவணனுக்கு சீட் இல்லையா? தாமரை சின்னத்தில் களமிறங்கும் திருமாறன்.. பின்னணியில் மூவர்! -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி..40 கேட்ட பாஜகவுக்கு 27! ஒரே நாளில் முடிந்த டீலிங்..கெத்து அதிமுக! -
Election Commission: தேர்தல் ஆணைய கடிதத்தில் பாஜகவின் முத்திரை.. கேரள அரசியல் கட்சிகள் அதிர்ச்சி.. நடந்தது என்ன? -
பாமக வரலாற்றிலேயே முதல் முறையாக.. 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைவான தொகுதிகளில் போட்டி! -
Annamalai: அதிமுக அலுவலகத்தில் அண்ணாமலையை காணோமே! ஆதரவாளர்கள் அப்செட்! எடப்பாடி கண்டிஷனா? -
இன்னும் சற்று நேரத்தில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு.. அதிமுக அலுவலகத்துக்கு விரைந்த பியூஷ் கோயல் -
பொறுப்பு வழங்கப்பட்டால்தானே செயல்பட முடியும்! முடிவுக்கு வரும் பாஜகவுடனான சரத்குமாரின் பயணம்? -
சாத்தூர் தொகுதியில் போட்டியா? எங்கும் போட்டியிடுவேன்.. நயினார் நாகேந்திரன் நேரடியாக சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications