இந்த முறையாவது தேர்தல் தடையின்றி நடக்குமா?... ஆர்.கே. நகர் மக்கள் எழுப்பும் கேள்விகள்?
பணப்பட்டுவாடா புகார் வந்தால் அது குறித்து நடவடிக்கை எடுப்பதை விட்டு தேர்தலை நிறுத்துவதை ஏற்க முடியாது என்று சென்னை டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் தொகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
Recommended Video

சென்னை : பணப்பட்டுவாடா புகார் எழுந்தால் சம்பந்தப்பட்ட கட்சிகளின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர ஒட்டு மொத்தமாக தேர்தலை நிறுத்தி வைக்கக் கூடாது என்று தேர்தல் ஆணையத்தை ஆர்.கே.நகர் தொகுதி மக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
சென்னை ராதாகிருஷ்ணன் நகர் தொகுதிக்கான இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா புகார் காரணமாக ஏப்ரல் மாதத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் மீண்டும் தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது குறித்து ஆர்.கே.நகர் மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்று கள நிலவரத்தை பதிவு செய்துள்ளது தமிழ் ஒன் இந்தியா.

அந்தப் பகுதியில் கடை நடத்தி வரும் வியாபாரி ஒருவர் கூறியதாவது : ஆர்கே நகர்த் தொகுதி இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியாக இருக்கிறது. வழக்கமாக தேர்தல் முடிந்து ஒரு சட்டமன்ற உறுப்பினரைத் தேர்ந்தெடுக்க ஒரு மாதத்திற்கு மேலாகி விடும். ஆனால் இந்த இடைத்தேர்தல் 24 நாட்களுக்குள் அனைத்தும் முடிந்துவிடும் என்பது வாக்காளர்களுக்கு நல்ல விஷயம்.
தேர்தல் அறிவித்துவிட்டு நிறுத்தப்படுவதால் மத்திய அரசின் பணம் விரயமாகிறது, இது நடைபெறாமல் இந்த முறை நல்ல முறையில் தேர்தல் நடத்த ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். பணப்பட்டுவாடா புகார் வந்தால் ஆணையம் உடனடியாக அது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர உடனடியாக தேர்தலை ரத்து செய்துவிடக் கூடாது என்றார்.
இந்தத் தொகுதியில் பல ஆண்டுகளாக வசித்து வரும் இவர் தேர்தல் குறித்து தெரிவித்ததாவது : ஆர்.கே நகர் தொகுதிக்கான பிரதிநிதியை இப்போதே தேர்ந்தெடுக்க வேண்டும். அரசின் நிதி தொகுதி மக்களுக்கு கிடைக்காமல் மக்களின் பல திட்டங்கள் முடங்கிப் போயுள்ளன. ஒரு எம்எல்ஏ தேர்ந்தெடுக்கப்பட்டால் இந்தப் பகுதியில் இருக்கும் ஹவுசிங் போர்டு பிரச்னை, சென்னியம்மன் கோவில் மற்றும் அரசு கல்லூரி பாலிடெக்னிக் கல்லூரிப் பிரச்னைகளுக்கு ஒரு முடிவு கிடைக்கும் என்று கூறினார்.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications