தயாரிப்பாளர் கவுன்சிலிருந்து தூக்குவதால் பழிவாங்குகிறார் விஷால்- ராதிகா
தயாரிப்பாளர் கவுன்சிலிருந்து விஷாலை தூக்குவதால் அதற்குப் பழிவாங்கும் வகையில் திசை திருப்பும் வகையில் நடிகர் சங்கத்திலிருந்து சரத்குமார் நீக்கப்பட்டுள்ளதாக ர ாதிகா கருத்து தெரிவித்துள்ளார்.
சென்னை: நடிகர் சங்கத்திலிருந்து சரத்குமார் உள்ளிட்டவர்களை நீக்குவது குறித்து உரிய காரணத்தை விஷால் கூறவில்லை. ஒரு வேளை தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து விஷாலை தூக்குவதால் இந்த திசை திருப்பும் வேலையில் ஈடுபட்டிருப்பதாக கருதுகிறேன் என்று நடிகை ராதிகா சரத்குமார் கூறியுள்ளார்.
நடிகர் சங்கத்திலிருந்து முன்னாள் தலைவர் சரத்குமார், ராதாரவி, வாகை சந்திரசேகர் ஆகியோரை நிரந்தரமாக நீக்கிக நேற்று நடிகர் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டம் முடிவெடுத்தது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பின்னர் பேசும்போது நடிகர் சங்கத் தலைவர் நாசர் மேலோட்டமாகவும், செயலாளர் விஷால் பகிரங்கமாகவும் கூறினர்.
இதுகுறித்து சரத்குமாரின் மனைவியும் நடிகர் சங்கத்தின் மூத்த உறுப்பினர்களில் ஒருவருமான நடிகை ராதிகா கூறுகையில், இந்த நீக்கத்திற்கான காரணத்தை அவர்களால் சொல்ல முடியவில்லை. ஒரு வேளை விஷாலை தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து தூக்குவதால் அதை திசை திருப்பும் செயலாக இந்த நீக்கத்தை சொல்லியுள்ளார்களோ என்று கருதுகிறேன்.
ராதாரவி ஏற்கனவே தன்னை சஸ்பெண்ட் செய்ததை எதிர்த்து ஸ்டே வாங்கியுள்ளார் என்று கூறியுள்ளார் ராதிகா.