ஜல்லிக்கட்டு தடை நீக்கம்: ஓபிஎஸ்க்கு நன்றி சொன்ன ராகவா லாரன்ஸ், கவுதமன்
ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்கியதற்கு முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை நேரில் சந்தித்து ராகவா லாரான்ஸ், கவுதமன் ஆகியோர் நன்றி தெரிவித்தனர். கைது செய்யயப்பட்டவர்களை விடுவிக்கவும் வலியுறுத்தினர்.
சென்னை: ஜல்லிக்கட்டு தடையை நீக்கக்கோரி நடந்த போராட்டத்தின் எதிரொலி காரணமாக தற்போது பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டி நடந்து வருகிறது. இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட நடிகர் லாரன்ஸ் மற்றும் இயக்குனர் கவுதமன் ஆகியோர் தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினர். தமிழகம் முழுவதும் கைது செய்யப்பட்ட மாணவர்கள், இளைஞர்களை விடுவிக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியதாக தெரிகிறது.
ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த நடவடிக்கை எடுத்ததற்காகவும், மாணவர்கள் போராட்டத்துக்கு காவல்துறை பாதுகாப்பு அளித்ததற்காகவும் முதல்வருக்கு நன்றி தெரிவித்தனர்.

சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ராகவா லாரன்ஸ், ஜல்லிக் கட்டுக்கான தடையை நீக்கியதற் காக முதல்வர் மற்றும் பிரதமரை சந்தித்து நன்றி தெரிவிக்க வேண்டும் என மாணவர்கள் விரும்புகின்றனர். முதலில் முதல்வரை சந்தித்துள்ளோம்.
தமிழகம் முழுவதும், பல்வேறு பகுதிகளில் மாணவர்கள், இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீதான வழக்குகளை திரும்ப பெற வேண்டும். அவர்களை விடுதலை செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் முதல்வரிடம் கோரிக்கை விடுத்தோம். முதல்வரும் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார் என்றார்.
கவுதமன் சந்திப்பு
இதையடுத்து, திரைப்பட இயக்குநர் கவுதமன், சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் பார்வைதாசன், பிரதீப்குமார், சென்னை கிறிஸ்தவக் கல்லூரி மாணவர் அரவிந்த் ஆகியோர் முதல்வரை சந்தித்து நன்றி தெரிவித்தனர். மேலும் கைது செய்யப்பட்ட இளைஞர்களை விடுவிக்க வேண்டும், காவிரி நதிநீர் விவகாரத்தில் தமிழக உரிமையை பாதுகாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை கள் அடங்கிய மனுவையும் அளித்தனர்.
கைது செய்யப்பட்ட இளைஞர்களை விடுவிக்க வேண்டும், காவிரி நதிநீர் விவகாரத்தில் தமிழக உரிமையை பாதுகாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவையும் அப்போது அவர்கள் அளித்தனர்.
-
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை?












Click it and Unblock the Notifications