சோனியாவைத் தொடர்ந்து 21ம் தேதி தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியைத் தொடர்ந்து அடுத்து துணைத் தலைவர் ராகுல் காந்தி தமிழகத்திற்குப் பிரசாரம் செய்ய வரவுள்ளார். 21ம் தேதி அவர் பிரசாரம் மேற்கொள்கிறார்.

அவர் பிரசாரம் செய்யும் இடம் இன்னும் முடிவாகவில்லை. இன்று இரவுக்குள் முடிவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே சோனியா காந்தி தமிழகத்திற்கு வந்து சத்தம் போடாமல் பிரசாரம் செய்து விட்டு போன நிலையில் அடுத்து ராகுல் காந்தி வரவுள்ளார்.

Rahul to campaign on April 21 in TN

அமைதியான காங்கிரஸ்

தமிழக கட்சிகளிலேயே எந்தவிதமான ஆர்ப்பாட்டமும், பரபரப்பும் இல்லாமல் படு அமைதியாக வேலை பார்த்து வருவது காங்கிரஸ் மட்டுமே.

சத்தம் போடாமல் வந்த சோனியா

அக்கட்சியினருக்காக பெரிய அளவில் 2ம் கட்டத் தலைவர்கள்தான் பிரசாரம் செய்து வருகிறார்கள். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கன்னியாகுமரிக்கு வந்து பிரசாரம் செய்தபோது கூட பெரிய அளவில் பரபரப்பே இல்லை. அவரது பேச்சிலும் சாரமும் இல்லை.

ராகுல் வருகிறார்

இந்த நிலையில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்துப் பிரசாரம் செய்வதற்காக ராகுல் காந்தி வருகிறார்.

21ம் தேதி பிரசாரம்

ராகுல் காந்தி 21ம் தேதி தமிழகத்தில் பிரசாரம் செய்யத் திட்டமிட்டுள்ளாராம்.

எங்கே பிரசாரம்

ஆனால் அவர் எங்கு பிரசாரம் செய்வார் என்பது தெரியவில்லை. அது இன்னும் முடிவாகவில்லை.

திருச்சி, ராமநாதபுரம், கோவை

இப்போதைக்கு கோவை, திருச்சி, ராமநதபுரம் ஆகிய இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அதில் ஒரு இடத்தில் அவர் பேசலாமாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+