ராமநாதபுரத்தில் 21–ந்தேதி ராகுல் பிரசாரம்
சென்னை: தமிழகத்தில் ராமநாதபுரம் லோக்சபா தொகுதியில் மட்டும் 21-ந் தேதியன்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறது.
தமிழகத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கன்னியாகுமரியில் சில நாட்களுக்கு முன்பு பிரசாரம் செய்தார். அக்கூட்டத்தில் மூத்த தமிழக காங்கிரஸ் தலைவர்கள் பலரும் கலந்துகொள்ளவில்லை.

அதன் பின்னர் வரும் 21-ந் தேதி ராமநாதபுரம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசரை ஆதரித்து காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி பிரசாரம் செய்கிறார்.
இதற்காக டெல்லியில் இருந்து விமானம் மூலம் 3.30 மணிக்கு மதுரை வரும் அவர் அங்கிருந்து ஹெலிகாப்டரில் ராமநாதபுரம் வருகிறார்.
ராமநாதபுரத்தில் நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் மாலை 4.30 மணிக்கு பேசுகிறார். பின்னர் ஹெலிகாப்டர் மூலம் மதுரை செல்லும் அவர் அங்கிருந்து விமானம் மூலம் டெல்லி திரும்புகிறார்.












Click it and Unblock the Notifications