பச்சிளம் குழந்தைகளுக்கான ‘ஜனனி சேவா’ திட்டம்.... சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் தொடக்கம்
சென்னை: பச்சிளம் குழந்தைகளுக்காக ‘ஜனனி சேவா' திட்டம் சென்னை எழும்பூர் ரயில்வே ஸ்டேஷனில் தொடங்கப்பட்டுள்ளது.
பயணத்தின் போது குழந்தைகளை கையாள்வது என்பது சவாலான விஷயம் தான். குறிப்பாக ரயில் பயணத்தின் போது பெற்றோர் தங்களது குழந்தைகளை கையாள்வதற்கு மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

இந்நிலையில், பச்சிளம் குழந்தைகளுக்கான ‘ஜனனி சேவா' திட்டம் தொடங்கப்படும் என ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு அறிவித்திருந்தார். இந்த திட்டத்தில் பச்சிளம் குழந்தைகளுக்கு தேவையான உணவு பொருட்கள், சூடான பால், வெந்நீர், பால் பவுடர் ஆகியவை கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்த திட்டத்தை நாடு முழுவதும் பல்வேறு ரெயில் நிலையங்களிலும் கொண்டு வருவதற்கான சிறப்பு ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன. இதனிடையே, சென்னை எழும்பூர் ரயில்வே ஸ்டேஷனில் உள்ள 4-வது நடைமேடையில் ஒரு கடையில் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. பச்சிளம் குழந்தைகளுக்கு தேவையான பால் பவுடர், பால் பாட்டில், வெந்நீர், சூடான பால் ஆகியவை அங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications