416 நடமாடும் மருத்துவமனைகள்: தமிழகம் முழுவதும் மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில் திறப்பு
சென்னை: தமிழகம் முழுவதும் மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில் 416 நடமாடும் மருத்துவமனைகளை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்து வைத்தார். இந்த மருத்துவ குழுவினர் வெள்ளம் பாதித்த பகுதிகளில் வீடு வீடாக சென்று சிகிச்சை அளிப்பார்கள் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழையின் தீவிரத்தால் நீர் நிலைகள் நிரம்பி வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. மழைக்கால நோய்கள் மக்களை மிரட்டி வருகின்றன. ஏராளமானோர் காய்ச்சல், வயிற்றுப்போக்கு பிரச்சினையால் மருத்துவமனைகளுக்கு படையெடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழகம் முழுவதும் தமிழகம் முழுவதும் மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில் 416 நடமாடும் மருத்துவமனைகள் தொடங்கப்பட்டுள்ளன. சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், திட்டத்தை தொடங்கி வைத்தார். ஒரு மருத்துவர், நர்ஸ், மருந்தகர், மருந்துவ ஆய்வாளர் உள்ளிட்டோர் இந்த மருத்துவக் குழுவில் இடம் பெற்றுள்ளனர்.
சென்னையில் மட்டும் 30 நடமாடும் மருத்துவமனைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்தின் கீழ், பொதுமக்களின் வசிப்பிடங்களுக்கு சென்று சிகிச்சை அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த நடமாடும் மருத்துவ சேவையில் தலா ஒரு மருத்துவர், செவிலியர், மருந்தாளுநர் உடனிருப்பர் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதே போல், பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குவதை உறுதி செய்ய, தமிழகம் முழுவதும் 770 பொது சுகாதாரக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications