சென்னையில் இரவில் கொட்டிய கன மழை.. தமிழகத்தில் இன்றும் நீடிக்கும் என வானிலை மையம் தகவல்

Subscribe to Oneindia Tamil

சென்னை : பகல் நேரத்தில் வெயில் வாட்டிய நிலையில் இரவில் மேகக் கூட்டங்கள் திரண்டு கன மழை கொட்டியதால் வெப்பம் தணிந்து சென்னைவாசிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

சென்னையில் கடந்த சில நாட்களாக பகல் நேரத்தில் வெப்பம் காய்ந்து, மாலை நேரங்களில் கன மழை கொட்டி வருகிறது. புறநகர்களிலும் இதே சூழல் தான்.

rain

இந்நிலையில் வெப்பச்சலனம் காரணமாக நேற்று இரவும் கன மழை கொட்டித் தீர்த்தது. கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், வடபழனி, மீனம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் பரவலாக மழை பெய்தது.

பட்டினப்பாக்கம், வேளச்சேரி, மடிப்பாக்கம், அடையாறு உள்ளிட்ட சில பகுதிகளில் மிதமான மழை பெய்தது. வேளச்சேரி, மடிப்பாக்கம் உள்ளிட்ட இடங்கள் தாழ்வான பகுதிகள் என்பதால், அங்கு மழைநீர் சாலைகள் தெரியாத அளவிற்கு தேங்கியது.

இந்நிலையில், தமிழகம், புதுச்சேரியில் ஆங்காங்கே இன்றும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையைப் பொருத்த வரை வானம் மேகமூட்டமாக இருக்கும் என்றும், மாலை அல்லது இரவில் மழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+