சென்னையில் லேசான மழை... வெக்கையை கிளப்பிய வருத்தத்தில் மக்கள்
சென்னையில் லேசான மழை பெய்தது.
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னையில் லேசான மழை பெய்தது. இதனால் வெக்கையை கிளப்பியதாக மக்கள் வருத்தம் தெரிவித்தனர்.
தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் தென்மேற்கு பருவமழையால் மழை பெய்து வந்தது. இந்நிலையில் இந்த பருவமழை தற்போது ஓய்ந்துவிட்டது. இந்நிலையில் வெப்பசலனம் காரணமாக சென்னையில் பல்வேறு இடங்களில் மழை பெய்த வண்ணம் இருந்தது.

இந்நிலையில் இன்று மாலை மழை பெய்யும் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி இன்று மாலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதையடுத்து வளசரவாக்கம், தாம்பரம், குரோம்பேட்டை, முகப்பேர், பல்லாவரம், சேலையூர், பெருங்கொளத்தூர் உள்ளிட்ட பகுதிகளிலும் லேசான மழை பெய்தது.

இந்த மழை வெக்கையை கிளப்பியதால் இன்று இரவு அதிக மழைக்கு வாய்ப்பிருக்கும் என்று தெரிகிறது. எனினும் தாம்பரத்தில் மழை வெளுத்து வாங்குகிறது.


வானிலை தொடர்பான மேலும் விவரங்களுக்கு












Click it and Unblock the Notifications