ப்ப்பா என்னாமா இருக்கு கிளைமேட்.. தொடங்கியது வட கிழக்கு மழையின் டிரெய்லர்.. சென்னையில் ஜிலுஜிலு மழை
வடகிழக்கு பருவமழையின் முன்னோட்டமாக சென்னையில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது.
சென்னை: சென்னையில் காலை முதலே வானம் மேக மூட்டத்துடன் இருக்கும் நிலையில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது.
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழையாலும், வெப்பசலனத்தாலும் அவ்வப்போது மழை பெய்தது. இதைத் தொடர்ந்து அண்டை மாநிலங்களில் பெய்த மழையால் நீர் நிலைகள் நிரம்பின.

வடகிழக்கு பருவமழை நேற்றுடன் முடிவடைந்து விட்டதாக கூறப்பட்ட நிலையில் தமிழகத்தின் வட மாவட்டங்களுக்கு மழையை அளிக்கும் வடகிழக்கு பருவமழை இன்று தொடங்குவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
இதன் முன்னோட்டமாக நேற்று முதல் சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் விட்டு விட்டு மழை பெய்தது.
இன்று காலை சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. இதையடுத்து அசோக் பில்லர், கே.கே.நகர், முகப்பேர், அண்ணா நகர் ஆகிய இடங்களில் மழை பெய்து வருகிறது. இது வடகிழக்கு பருவமழையின் முன்னோட்டமாகவே கருதப்படுகிறது.
திருவெற்றியூரில் சாரல் மழை பெய்து வருவதோடு சூறைக்காற்றும் வீசுவதால் மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்லவில்லை.












Click it and Unblock the Notifications