கனமழை: சென்னை உள்ளிட்ட 5 மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை – பல்கலை., தேர்வுகள் ரத்து

Subscribe to Oneindia Tamil

சென்னை: விடிய விடிய பெய்து வரும் தொடர் மழை காரணமாக தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2 நாட்களாக தமிழகத்தில் பல இடங்களில் தொடர்ந்து கனமழை கொட்டிவருகிறது. நேற்று மாலை முதல் சென்னையில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.

பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

தொடர்மழையால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருவாருர் மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் இன்று விடுமுறை அறிவித்துள்ளனர்.

பள்ளிகளுக்கு மட்டும்

பள்ளிகளுக்கு மட்டும்

இதேபோல், நாகை, விழுப்புரம், கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அறிவித்துள்ளனர்.

சென்னை பல்கலைக்கழக தேர்வு ரத்து

சென்னை பல்கலைக்கழக தேர்வு ரத்து

மேலும், தொடர் மழை காரணமாக சென்னையில் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால், இன்று சென்னை பல்கலைக் கழக தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று சென்னை பல்கலைக் கழக துணை வேந்தர் தெரிவித்துள்ளார்.

அண்ணா பல்கலைக்கழக தேர்வு

அண்ணா பல்கலைக்கழக தேர்வு

அதே நேரம், அண்ணா பல்கலைக் கழக தேர்வுகள் வழக்கம்போல் இன்று நடைபெறும் என்று அண்ணா பல்கலைக் கழக பதிவாளர் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

காற்றழுத்த தாழ்வு

காற்றழுத்த தாழ்வு

இதனிடையே அந்தமான் அருகே தென்கிழக்கு வங்கக் கடலில் நிலைக் கொண்டிருந்த குறைந்தக் காற்றழுத்தத் தாழ்வு பகுதி மேற்கு நோக்கி, தமிழகம் அருகே நகர்ந்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் 2 நாட்களுக்கு மழை

மேலும் 2 நாட்களுக்கு மழை

தென் மேற்கு வங்க கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாகவே நிலை கொண்டு உள்ளது. இதனால், தமிழகம், புதுச்சேரியின் கடலோரப் பகுதிகளின் மேலும் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இடியுடன் மழை

இடியுடன் மழை

உள் தமிழகம், மற்ற மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும். சென்னை மாநகரைப் பொருத்தவரையில் ஒரு சில நேரங்களில் நகரில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். ஒரு சில இடங்களில் கன மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தண்ணீர் திறப்பு நிறுத்தம்

தண்ணீர் திறப்பு நிறுத்தம்

காவிரி டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால், மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் நீர் இன்று காலை 9 மணி முதல் நிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+