கனமழை... நெல்லை மாவட்டத்தில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
நெல்லை: அதிகாலை முதல் கனமழை பெய்து வருவதால் நெல்லை மாவட்டத்தில் இயங்கி வரும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

அரபிக் கடல் பகுதியில் நிலவி வந்த மேலடுக்கு சுழற்சியானது கர்நாடக கடற்கரையை ஒட்டிய அரபிக் கடல் பகுதியில் நீடிப்பதாக நேற்று வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இந்த மேலடுக்கு சுழற்சியின் காரணமாகவே தென் மாவட்டங்களில் பல இடங்களிலும், வட மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்தது. மேலும் 24 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும் எனவும் வானிலை மையம் அறிவித்திருந்தது.
இந்நிலையில், இன்று அதிகாலை முதலே நெல்லை மாவட்டத்தில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதனால், இன்று நெல்லை மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியாளர் கருணாகரம் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications