அருப்புக்கோட்டையில் குளு குளு ஆலங்கட்டி மழை… பொதுமக்கள் மகிழ்ச்சி
தமிழகத்தில் அக்னி வெயில் அனைவரையும் சுட்டெரித்துக் கொண்டிருக்கும் வேளையில், அருப்புக்கோட்டையில் குளு குளுவென ஆலங்கட்டி மழை பெய்துள்ளது. இது அந்தப் பகுதிவாசிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Subscribe to Oneindia Tamil
விருதுநகர்: அருப்புக்கோட்டையில் ஆலங்கட்டி மழை பெய்துள்ளது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் தொடங்கியதை அடுத்து, கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. என்றாலும் சில இடங்களில் வெப்ப சலனம் காரணமாக கோடை மழை கொட்டி வருகிறது.

தமிழகத்தில் கோடை வெயில் காலை 7 மணி முதலே வாட்டி எடுத்து வருகிறது. பல மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டிற்கு மேல் வெப்பம் தகிக்கிறது. இதனால் மக்கள் வெளியே தலைகாட்ட முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். பலர் வீடுகளில் முடங்கிப் போயுள்ளனர்.
இந்நிலையில், இன்று விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் ஆலங்கட்டி மழை பெய்துள்ளது. மேலும், விருதுநகரின் பல இடங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. இதனால் பொதுமக்கள், விவசாயிகள் என அனைத்துத் தரப்பினரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications