சென்னையில் அமைச்சர்கள், நீதிபதிகள் வீடுகளுக்குள்ளும் வெள்ள நீர் புகுந்தது
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னையில், நீதிபதிகள், அமைச்சர்கள் வீடுகளுக்குள்ளும் வெள்ளம் புகுந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை அடையாறு கிரீன்வேஸ் சாலையில் அமைச்சர்கள், நீதிபதிகள் வீடுகள் பெருமளவுக்கு உள்ளன. ஆனால், கன மழையால், அந்த வீடுகளுக்குள்ளும் வெள்ள நீர் புகுந்துள்ளது.

ஹைகோர்ட் நீதிபதி தேவதாஸ் வீட்டுக்குள் சுமார் 3 அடி உயரத்திற்கு நீர் தேங்கியுள்ளது. பால்வளத்துறை அமைச்சர் ரமணா வீட்டுக்குள்ளும் வெள்ளம் சூழ்ந்து நிற்பதை பார்க்க முடிந்தது.

அந்த சாலைகளில் உள்ள மரங்களில் இருந்து கிளைகள் உடைந்து விழுந்ததால், அமைச்சர்களும், நீதிபதிகளும் வெளியே செல்ல முடியாமல் தவித்தனர். பம்ப்புகள் மூலம், தண்ணீர் உறிஞ்சும் பணி அங்கு நடக்கிறது.













Click it and Unblock the Notifications